340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரும் அறிவித்தல் இன்று மாவட்ட செயலாளர்களால் வெளியிடப்படும் என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அறிவிப்பு வெளியிடப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பின்னர் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன
வேட்புமனுக்களை கோரும் வர்த்தமானி அறிவித்தலை அரச அச்சகத் திணைக்களத்துக்கு இன்று அனுப்பி வைப்பதற்கு முன்னதாக இறுதிப்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள், இடம்பெற்றதாகவும் தெரியவருகிறது.