புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜன., 2013


கைதானவர்களில் மேர்வினின் செயலாளர்கள் இருவரும் உள்ளடக்கம்!


களனி பிரதேச சபை உறுப்பினர் ஹசித மடவலவின் கொலையுடன் தொடர்புடையதான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேகநபர்களில், அமைச்சர் மேர்வின் சில்வாவின் செயலாளர்க
ள் இருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளரான சரத் குமார (சிங்கப்பூர் சரத்) மற்றும் இணைப்புச் செயலாளரான சமன் நிஷாமன் ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களுடன், சோமரத்ன குமார பெரேராவும் அவரது மகன் ரங்கன குமார பெரேரா, சதுரங்க வீரசேகர ஆகியோருமே கைதாகியுள்ளனர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

ad

ad