மதுரை ஆதினத்துக்கு எதிராக நித்தி வழக்கு
மதுரை ஆதினம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரி நித்தியானந்தா புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.
மதுரை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நித்தியானந்தா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நித்தியுடன் தாம் செய்த அறக்கட்டளை ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதினம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிபதி குருவய்யா முன்னிலையில் ஆதினம் தாக்கல் செய்த மனு விசாரணையில் உள்ளது. மதுரை ஆதின ஒப்பந்தத்தை ரத்து செய்ய அரசிடம் அனுமதி பெறவில்லை என நித்தியா னந்தா மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.