தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து யுவராஜ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சிப் பணிகளை ஒழுங்காக ஆற்றவில்லை என்ற குற்றச்சாட்டையடுத்து அவர் மீது கட்சி மேலிடம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஈரோட்டைச் சேர்ந்த யுவராஜ், கடந்த இரண்டு ஆண்டு காலமாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து வருகிறார். கடந்த சட்டசபைத் தேர்த-ல் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.