ஜெயலலிதாவுக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்
இந்திய அரசால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் நடைபெற்ற 2 நாள் திருவிழா இன்று நிறைவடைந்தது.
இந்த திருவிழாவில் இலங்கையில் உள்ள இந்திய தூதர் அசோக் கந்தா, இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் பங்கேற்றனர். ராமேஸ்வரம் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் மீனவர்களும் இந்த திருவிழாவை கண்டு களித்தனர்.
மீனவர்களிடையே பேசிய இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா, ’’இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கிடையே நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக இருதரப்பு மீனவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன்’’ என்று கூறினார்.