பிரிகேடியர் மாதவன் மாஸ்டர் வீரச்சாவு புகைப்படம்
தமிழீழ விடுதலை புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவரும் புலிகளின் புலனாய்வுத்துறையின் ஆரம்ப கர்த்தாவுமான மாதவன் மாஸ்டர் அவர்கள் 2009முள்ளிவாய்க்கால் இறுதிச்சமரில் வீரச்சாவடைந்துள்ளார். தலைவர்
புலனாய்வுத்துறையில் பலரை உருவாக்கியதோடு புலனாய்வின் வீச்சை அதிகரித்து செயற்பாடுகளை விரிவுபடுத்தியவர். உலகநாடுகளில் வாழும் பலரது அன்பையும் நட்பையும் பெற்று புலனாய்வுத்துறை திறம்பட செயற்பட்ட மூத்த தளபதிகளில் இவர் குறிப்பிடத்தக்க இடத்தை வகித்தார். அண்மையில் வெளியான இலங்கையரச பயங்கரவாத அரசின் யுத்தக்குற்ற மீறல் படங்களில் மாதவன் மாஸ்டரின் படமும் வெளியாகியுள்ளது.