புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2013


கேணல் வசந்த் வீரச்சாவு உறுதிப்படுத்த பட்டது …வீரவணக்கத்தை தெரிவிக்கின்றோம்

இங்கு தளபதி சொர்ணத்தின் வலப்பக்கம் இருப்பவர் திருகோணமலை மாவட்ட கட்டளை தளபதி வசந். நேற்று வெளியான அதிர்ச்சியும் வேதனையும் ஆவேசமும் தர கூடிய புcol-vasanthan-600x367 
sorrnamகைப்படம், அவர் வீர மரணம் என்பதை உர்ஜிதம் செய்துள்ளது. அப்படத்தில் கழுத்தில் சங்கிலி ஒன்றுடன் முன்வரிசையில் வசந்த் இருகின்றார்,. மிக பெரிய வீரன் . சிங்கள இராணுவ இயந்திரத்தை கிழக்கில் முடக்கிய பெரும் சாதனையாளர் . அவர் தலைவரின் மிகப்பெரிய நம்பிக்கைக்கும் பொட்டம்மானின் வலகரமாவும் இருந்தவர். தளபதி சொர்ணத்தின் இணை பிரியா நம்பிக்கைக்கு உரிய தளபதி, இருவரும் இணை பிரியா .நன்பர்கள் . சிறு வயது முதல் சொர்ணமும் வசந்தும் பாசமுடன் பழகிய உறவுகள் . இறுதி போரில் தளபதி வசந் பல சாதனைகளை படைத்து, தளபதி சொர்ணத்துடன் இறுதி வரை நின்று போராடி , பின் சரணடைவது என்னும் முடிவில் நிராயுத பணிகளாக அஞ்சாது எதிரிகள் தம்மை கொல்வார்கள் அவமான படுத்துவார்கள் என்று அறிந்தும் வீரமனதுடன் தமது முடிவு எம் இனத்துக்கு ஒரு விடிவை தரும் என்று சிங்கள இனத்துவேசிகளின் கொலை களத்துள் தம்மை கள பலியாக்கிய மாபெரும் வரலாற்று மனிதர்கள் வரிசையில் தளபதி வசந்தும் அவரது தோழர்களும் அந்த போராளிகளின் ஒருவரின் மகனும் இந்த உலகை உலுக்கும் தியாகத்தை செய்துள்ளார்கள் …. அவர்கள் அனைவருக்கும் எமது வீர வணக்கம் …… வீரவணக்கம் … வீர வணக்கம் …. தமிழரின் தாகம் தமிழ் ஈழ தாயகம் புலிகளின் தாகம் தமிழ் ஈழ தாயகம் .
.

ad

ad