முரளி ஹார்மனி கிண்ண இருபது–20 கிரிக்கெட் சுற்றுத் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று கொழும்பு சென்.பீற்றர்ஸ் கல்லூரி அணியும் – கண்டி புனித திரித்துவக் (ரினிட்றி ) கல்லூரி அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் பி.ப. 1.30 ஆரம்பமாகும் இப்போ ட்டியில் நடப்பாண்டுக்கான கிண்ணத்தை கைப்பற்றப்போகும் அணி எது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டுக்கான முரளி ஹார்மனி கிண்ண இருபது-20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த முதலாம் திகதி ஆரம்பமானது. வடமாகாணத்தின் 5 இடங்களில் நடைபெற்று வரும் இச்சுற்றுப்போட்டியில் அகில இலங்கை ரீதியாக களமிறங்கிய 12 அணிகளும் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் கட்ட போட்டிகள் நடைபெற்றன.
ஒவ்வொரு பிரிவுகளிலும் முதலிடம் பெற்ற அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றதுடன், மூன்று பிரிவுகளிலும் இரண்டாம் இடத்தில் இருந்த அணிகளில் நிகர ஓட்ட விகித அடிப்படையில் முன்னிலையிலிருந்த அணியும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
இதனடிப்படையில் 'சி' பிரிவில் முதலிடம் பெற்ற கொழும்பு சென்.பீற் றர்ஸ் கல்லூரி, 'டி' பிரிவில் முதலிடம் பெற்ற தர்மசோக கல்லூரி, 'ஈ' பிரிவில் முதலிடம் பெற்ற கண்டி ரினிட்றி கல்லூரி, மற்றும் நல்லிணக்கத்திற்கான அமைப்பின் சீனிகம அணி ஆகியன அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.
இந்நிலையில் அரையிறுதிப்போட்டிகள் நேற்று முல்லைத்தீவிலும் கிளிநொச்சியிலும் நடைபெற்றன. முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப்போட்டியில் தர்மசோக கல்லூரி- அணி நிர்ணயித்த 129 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை அடைந்த ரினிட்றி அணி இறுதிப்போட்டியை உறுதி செய்தது.
இதேவேளை, கிளிநொச்சியில் நடைபெற்ற 2 ஆவது அரையிறுதியில் சீனிகம அணியை 44 ஓட்டங்களுக்குள் சுருட்டிய சென்.பீற்றர்ஸ் அணி 11.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து அவ்விலக்கை அடைந்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.