மாநாட்டில்தான் பாராளுமன்ற தேர்தல் முடிவு குறித்து அறிவிப்பேன்: விஜயகாந்த் பேச்சு
ஞாயிற்றுக்கிழமை நடந்த தே.மு.தி.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:–தற்போது, தமிழகத்தில் ஆண்டு கொண்டிருக்கும் கட்சி நாட்டை இருட்டாக்கிவிட்டுவிட்டு,
40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறிவருகிறது. மக்களை ஏமாற்ற சதி வேலை செய்கிறது. கூட்டணி வியூகம் எப்படி அமைக்க வேறு ‘ரூட்’ வைத்திருக்கிறேன்.ஞாயிற்றுக்கிழமை நடந்த தே.மு.தி.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:–தற்போது, தமிழகத்தில் ஆண்டு கொண்டிருக்கும் கட்சி நாட்டை இருட்டாக்கிவிட்டுவிட்டு,
விஜயகாந்த் என்றாலே எப்போதும் கோபப்படுகிறான் என்கிறார்கள். கோபம் வருவது இயற்கைதான். அடிக்கிற கைதான் அணைக்கும் என்று கூறுகிறார்கள். 1991–ம் ஆண்டில் இருந்து 2008–ம் ஆண்டு வரை, தமிழ்நாட்டில் 2 கட்சிகளும்தான் மாறிமாறி ஆட்சியில் இருந்து வருகின்றன. ஆனால், மின் உற்பத்திக்காக என்ன செய்தார்கள்.
நமது கட்சியில் கூட்டணி குறித்து பேச அரசியல் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணி பற்றி பேச வருபவர்கள் அவர்களிடம் பேசுங்கள். உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் மாநாட்டையும் நாம் சிறப்பாக நடத்த வேண்டும்.
இவ்வளவு கூட்டமா என்று எல்லோரும் மூக்கின் மேல் விரலை வைக்கவேண்டும். அதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த மாநாட்டில்தான் பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வின் முடிவு குறித்து அறிவிப்பேன்.
என் மனதில் ஒரு ரகசியம் உள்ளது. அதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இன்றைக்கு ஊடகங்கள், தே.மு.தி.க. அந்த கட்சியுடன் கூட்டணி, இந்த கட்சியுடன் கூட்டணி என்று கூறுகின்றன. நாங்கள் தனித்து நின்றால் என்ன செய்வீர்கள். அதனால், பொறுத்திருந்து பாருங்கள். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.