புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2015

புதிய அரசியல் கூட்டமைப்பு தொடர்பில் இதுவரையில் முடிவு எட்டப்படவில்லை



தென்னிலங்கை தமிழ் கட்சிகள் மத்தியில் புதிய அரசியல் கூட்டமைப்பு ஒன்று உருவாவது தொடர்பில் தகவல்கள் சமூக ஊடகங்களிலும், இணைய தளங்கள் சிலவற்றிலும் வெளியானதும், மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர் மத்தியில் பாரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
எனினும் இது தொடர்பில் இதுவரை எந்த வித இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட கட்சி தலைவர்கள் மத்தியில் கலந்துரையாடல்கள் மாத்திரமே இதுவரையில் நடைபெற்றுள்ளன.
இந்த யோசனையையிட்டு சம்பந்தப்பட்ட கட்சிகள் மற்றும் தலைவர்கள் பொது உடன்பாட்டுக்கு வர  முடியுமானால் மாத்திரமே இந்த கூட்டமைப்பு உருவாகும்  என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை கொழும்பு பிரைட்டன் உணவகத்தில் நடைபெற்ற ஜனநாயக மக்கள் முன்னணியின் அங்கத்தவர் ஒன்றுகூடலில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

நாம் அமைக்க முயல்வது தென்னிலங்கை தமிழ் கட்சிகள் மத்தியிலான ஒரு அரசியல் கூட்டமைப்பு. மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாண இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களை இந்த கூட்டமைப்பு அரவணைக்கும். ஆனால், இது மலையகம் என்ற வரையறையை மாத்திரம் கொண்ட ஒரு கூட்டமைப்பு அல்ல.
கொழும்பில் வாழும் வடகிழக்கை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களையும், களுத்துறை முதல் கொழும்பு, கம்பஹா, புத்தளம் உட்பட மேற்கு கரையோர மாவட்டங்களிலேயே பிறந்து வளர்ந்துவிட்ட  அடையாளத்தை கொண்ட தமிழ் மக்களையும், நாம் கூட்டிணைப்போம்.

வடக்குகிழக்கில் வாழ்கின்ற பெரும்பான்மை தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இருக்கின்றார்கள். வடக்கில்  கிளிநொச்சி, வன்னி மாவட்டங்களில் குடியேறி வாழும் மலையகத்தை பூர்வீகமாக கொண்ட பெருந்தொகை மக்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

அதுபோல் தென்னிலங்கையில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் நமது கூட்டமைப்புடன் இருப்பார்கள். ஏற்கனவே கொழும்பில் வாழும் பெரும்பான்மை தமிழ் மக்கள்,  நமது ஜனநாயக மக்கள் முன்னணியை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
இந்நிலையில் தென்னிலங்கையின்  நுவரேலியா, கொழும்பு, பதுளை, கண்டி, இரத்தினபுரி, கம்பஹா, கேகாலை, மாத்தளை, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நிலவும் விசேட களநிலவரங்களின் அடிப்படையில் நமது கூட்டமைப்பு பெரும்பான்மை கட்சிகளுடனான தேர்தல்கால உறவுகளை தீர்மானிக்கும். இந்த அடிப்படையிலேயே கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன.
இந்த பேச்சுவார்த்தைகளில் சிவில் சமூக பிரதிநிதிகளும் பங்களிப்பு செய்கின்றனர். இந்த முயற்சிகள் வெற்றி பெற்றால் மாத்திரமே இந்த கூட்டமைப்பு உருவாகும்

ad

ad