புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மார்., 2015

நான் சிறந்த சுதந்திரக் கட்சிக்காரன்! தவறு செய்திருந்தால் என்னை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லுங்கள்: மகிந்த

அரசியலில் இருந்து சில நாட்களாக தான் ஒதுங்கி இருப்பதாகவும் தான் சிறந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காரன் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய கலாபவனத்தில் நடைபெற்ற புகைப்பட கலைஞர் சங்கா வித்தானகமவின் ஊடகங்களில் வெளியான படங்களை கொண்ட முதலாவது புகைப்படக் கண்காட்சிக்கு வருகை தந்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அங்கு சென்றிருந்த ஊடகவியலாளர்கள், மகிந்த ராஜபக்சவிடம் தேசிய அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து வினவினர்.
தேசிய அரசாங்கம் பற்றிய யோசனைகள் இருக்கின்றதா என கூறிய முன்னாள் ஜனாதிபதி, நாம் பார்ப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கண்காட்சியில் முன்னாள் ஜனாதிபதியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் கலந்து கொண்டார்.

நான் தவறு செய்திருந்தால் என்னை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லுங்கள்: மகிந்த
நான் எதாவது தவறு செய்திருந்தால் என்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று இந்திய ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தன் சகோதரர்களையும் தன் பிள்ளைகளையும் தாக்குவதை நிறுத்தி விட்டு தவறு செய்திருந்தால் தங்களை நீதிமன்றித்தில் ஆஜர்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
தன் சகோதரர் கோத்தாபய ராஜபக்ச சட்டரீதியாக செய்த செயல்களுக்கும் குற்றம் சுமத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அவர் முன்னாள் பாதுகாப்பு அமைச்சராக கடமை புரிந்தவர் அதற்கமைய அனைத்து முடிவுகள் தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ad

ad