ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் நாடாளுமன்றை சென்றடைந்துள்ளனர்.
இன்று நடைபெறவுள்ள சந்திப்பில் பங்கேற்பதற்காக இருவரும் சற்று முன்னர் நாடாளுமன்றை சென்றடைந்துள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அபிவிருத்தி தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.