புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மே, 2015

விபூசிகாவை மீண்டும் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!


விபூசிகாவை மீண்டும் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் எம். ஐ வகாப்தீன் உத்தரவிட்டுள்ளார்.
விபூசிகாவின் தாயார் ஜெயகுமாரி விடுதலைப் புலி உறுப்பினருக்கு புகலிடம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அதன்போது மகள் விபூசிகா கிளிநொச்சி, மகாதேவா சைவச்சிறுவர் இல்லத்தில் தங்க வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அண்மையில் தாயாரான ஜெயக்குமாரி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். அதனையடுத்து விபூசிகா சிறுவர் இல்லத்தில் இருந்து தாயுடன் இணைந்தார்.
எனினும் தனது மகளை தன்னுடன் வைத்திருப்பதனால் மகளுக்கு பாதுகாப்பு இல்லையென்றும், அவரை மீண்டும் சிறுவர் இல்லத்திலேயே விடும்படி கண்டாவளை சிறுவர் நன்னடத்தை அதிகாரி திருமதி வி.சுரேஸிடம் ஜெயக்குமாரி கோரியிருந்தார்.
இதனையடுத்து நன்னடத்தை அதிகாரி சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

இவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், விபூசிகா மீண்டும் மகாதேவா சைவச்சிறுவர் இல்லத்தில் மீண்டும் தங்கவைத்து கல்விகற்பதற்கு அனுமதியளித்துள்ளார்.

ad

ad