திருகோணமலை மற்றும் அம்பாறை தவிர்ந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஏனைய மாவட்டங்களுக்கான இணைப்பு குழுவின் இணைத் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம் கிடைத்துள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்பிரகாரம், யாழ். மாவட்டத்தின் இணைப்பு குழுவின் இணைத் தலைவராக மாவை சேனாதிராஜாவும், முல்லைத்தீவில் எஸ்.சிவமோகனும், வவுனியாயில் செல்வம் அடைகலநாதனும்,
மன்னாரில் சாள்ஸ் நிர்மலநாதனும், கிளிநொச்சியில் எஸ்.சிறீதரனும், மட்டக்களப்பில் ஸ்ரீநேசனும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.