புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 அக்., 2016

பசிலின் காணியை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்ய நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட
மல்வானை உடமாப்பிடிகம பிரதேசத்தில் உள்ள சொகுசு வீடு மற்றும் பதினேழு ஏக்கர் காணியை பகிரங்க ஏலத்தில் விடுமாறு பூகொடை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதவான் ருவன் பத்திரண உத்தரவிட்டுள்ளார்.
நேற்று (14) பூகொடை நீதிமன்றத்தில் பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினால் தொடரப்பட்ட வழக்கின் போதே நீதிமன்ற நீதவான் ருவன் பத்திரன மல்வான உடமாப்பிட்டிகம பிரதேசத்தில் உள்ள ரூபா 640 இலட்சம் பெறுமதியான 17 ஏக்கர் காணியும் ரூபா 1200 பெறுமதியான சொகுசு வீடும் ஏலவிற்பனை செய்து பணத்தை வழக்கு தொடர்பான வங்கிக் கணக்கில் இடுமாறு பூகொடை நீதிமன்ற பதிவாளருக்கு நீதவான் உத்ததரவிட்டார்
இந்தக் காணியின் தற்போதைய உரிமையாளரான முதித ஜயகொடி தனது வழக்கறிஞர் துசிர மெலவ்லே மூலம் காணியின் உரிமை தனக்குரியது அல்ல என்று நீதிமன்றத்துக்கு தெரிவித்ததற்கு அமைய, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவும், தனது வழக்கறிஞர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க மூலம் நீதிமன்றத்துக்கு இக்காணியும், வீடும் தனக்கு சொத்தல்ல என நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தார்.
இதற்கமைய இக்காணி உரிமை தொடர்பாக சிக்கலான நிலைமை உருவாகியது. இது தொடர்பாக அரசாங்க பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சுஜித் முதலிகே நீதிமன்றத்தில் முன்னர் ஏலவிற்பனை செய்வதே சிறந்தது எனக் குறிப்பிட்டிருந்தார்.
நேற்று 14ஆம் திகதி வழக்கின் போது சொகுசு வீட்டின் நிர்மாணிப்பாளரான உபுல் ராமவிக்ரம என்பவர் தனது வழக்கறிஞர் மூலம் தனக்கும் இவ்வீட்டைக் நிர்மாணித்ததால் பணம் பெறவேண்டி இருப்பதாகவும் தெரிவித்தார். இவை அனைத்தையும் கருத்திற்கொண்டே நீதிமன்ற நீதவான் இந்த வீட்டையும், காணியையும் ஏலவிற்பனை செய்யுமாறு கட்டளையிட்டார்.
இவ்வழக்கு எதிர்வரும் ஜனவரி 10ம் திகதி வரை பிற்போடப்பட்டது.

ad

ad