புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மே, 2011


ராஜபக்சே போர்க் குற்றவாளி என்பதை சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்: டைரக்டர் சீமான் பேட்டி
 
ராஜபக்சே போர்க் குற்றவாளி என்பதை சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்: டைரக்டர் சீமான் பேட்டி
சென்னை, மே. 24-
 
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் நினைவு தினத்தையொட்டி நாம் தமிழர் கட்சியினர் பேரணியாக வந்து டைரக்டர் சீமான் தலைமையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றனர்.
 
பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரிய தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 30-வது நினைவு தினத்தில் அவரது திருஉருவ சிலைக்கு மரியாதை செலுத்தி உள்ளோம். தமிழ் தாழ்ந்துவிட கூடாது. தமிழன் வீழ்ந்துவிட கூடாது என்று போராடியவர் சி.பா.ஆதித்தனார்.
 
பாமரனுக்கும் தமிழ் மொழி போய் சேரவேண்டும் என்று “தினத்தந்தி”யை தொடங்கி இன்றளவும் வெற்றி நடைபோடுகிறது. அவர் தொடங்கிய நாம் தமிழர் இயக்கத்தை, அவர் எந்த லட்சியத்துக்காக தொடங்கினாரோ அந்த லட்சியத்துடன் பிள்ளைகளான நாங்கள் முன்னெடுத்து செல்கிறோம்.
 
அவரது கனவு நனவாகும்வரை, லட்சிய நோக்கத்தை அடையும் வரை அயராது உழைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
 
பின்னர் அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் கூறியதாவது:-
 
கேள்வி:  ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்பதை அறிவிக்க உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
 
பதில்: உலக நாடுகளின் ஆதரவை பெற தலைவர்களை சந்திக்கும் உள்ளரசியல் நடந்து வருகிறது. பல்வேறு தளங்களில் ஆதரவு திரட்டப்படுகிறது. இந்தியாவை பொறுத்த வரை இலங்கைக்கு ஆதரவா? எதிர்ப்பா? என்று இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
 
இந்தியாவின் மவுனத்தை பார்க்கும்போது இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறதோ என்று எண்ண தோன்றுகிறது. ராஜபக்சே போர்க்குற்றவாளி என்பதற்கான மேலும் பல ஆவணங்கள் விரைவில் வெளிவர உள்ளது. அதில் மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் இருக்கும் என்று நினைக்கிறோம்.
 
கேள்வி: இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோருவீர்களா?
 
பதில்: பொருளாதார தடை மட்டுமல்ல. இலங்கை அதிபர் ராஜபக்சே இனப்படு கொலை செய்த போர்க்குற்ற வாளி. ராஜபக்சே போர்க்குற்ற வாளி என்பதை அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலே தெரிவித்துள்ளார். மக்கள் மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளார்கள். எனவே அந்த அறிக்கையை சட்ட மன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

கே.பியை விசாரிக்க இலங்கை வரும் நெதர்லாந்து நீதிபதிகள்!

கே.பியை விசாரிக்க இலங்கை வரும் நெதர்லாந்து நீதிபதிகள்!

E-mailஅச்சிடுகPDF
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களின் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த நெதர்லாந்து நாட்டு நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் கொண்ட குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கை வர உத்தேசித்து உள்ளது.

இக்குழுவினர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக இருந்த குமரன் பத்மநாதன் உட்பட முன்னாள் புலி முக்கியஸ்தர்கள் 13 பேரை இலங்கையில் விசாரிக்கின்றமைக்கு எண்ணி உள்ளார்கள்.

இதற்கான அனுமதியைப் பெறுகின்றமை தொடர்பாக இலங்கையின் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸுடன் பேசி வருகின்றார்கள்.

இதே போல அமெரிக்கா சென்று விசாரணை நடத்துகின்றமைக்கும் யோசித்து உள்ளார்கள்.

புலிகள் இயக்கத்துக்காக அமெரிக்காவில் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டார் என்கிற வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்டு இருக்கும் பிரதீபன் என்பவரிடம் விசாரணை நடத்துகின்றமைக்கும் உத்தேசித்து உள்ளார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிதி சேகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக நெதர்லாந்து புலனாய்வுப் பிரிவினர் ஒபரேசன் கொனிங்க் என்கிற பெயரில் அதிரடி நடவடிக்கை ஒன்றை இரு வருடங்களுக்கு முன் ஆரம்பித்தனர்.

நெதர்லாந்தில் 38 பேர் புலிகளுக்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் என அடையாளம் கண்டு உள்ளார்கள்.

இவர்களில் மிக முக்கிய புள்ளிகளான இராமச்சந்திரன், சிறிரங்கம் ஆகியோரை கடந்த 13 மாதமாக தடுத்து வைத்து உள்ளார்கள்.

நெதர்லாந்தில் புலிகளின் நிதிச் செயல்பாடுகள் தொடர்பாக ஏராளமான ஆவணங்கள், ஆதாரங்கள் சோதனை நடவடிக்கைகளின்போது இப்புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப் பெற்று உள்ளன.

இந்த ஆதாரங்கள், ஆவணங்கள் அடிப்படையில் நெதர்லாந்து நாட்டு நீதிபதிகள் குழு வழக்கு நடவடிக்கைகளை முடுக்கி விட்டு உள்ளது.

கடந்த வாரம் நோர்வேக்கு சென்று விசாரணைகளில் ஈடுபட்டது. நோர்வேயில் புலிகளின் தலைவராக செயல்பட்டு வந்த நெடியவனை பிடித்து விசாரித்தனர்.

                        ராஜிவ் கொலைக்குப் பின்னால் திராவிட முன்னேற்ற கழகம்! தமிழக முதல்வர் குற்றச்சாட்டு
E-mailஅச்சிடுகPDF
இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி படுகொலையில் மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் மறைமுகமாக தொடர்புபட்டு உள்ளது என்று இந்தியாவின் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று குற்றம் சாட்டினார்.

இவர் ஊடகவியலாளர்களை சந்தித்துப் பேசியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவர் மேலும் கூறியபோது இக்குற்றச்சாட்டை அண்ணா திரவிட முன்னேற்ற கழகம் மிக நீண்ட காலமாக முன்வைத்து வந்திருக்கின்றது. ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பின்னால் திராவிட முன்னேற்ற கழகம் இருந்தது என நாம் கூறி வந்திருக்கின்றோம் என்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களின் ஒருவரான கே.பி இந்திய ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் வழங்கி இருந்த பேட்டியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் பிராமணிய எதிர்ப்பு கொள்கை காரணமாகவே ராஜிவ் காந்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வே.பிரபாகரன் வெறுத்தார் என்றும் படுகொலை செய்ய நேரடியாக உத்தரவு பிறப்பித்தார் என்றும் கூறி இருந்தார். 
இது தொடர்காகவே ஜெயலலிதா ஊடகவியலாளர்களுக்கு கருத்துச் சொல்லி இருந்தார்.                                                                                                                                                                                                                                                                                                                                                               


பாரிய குற்றம் சு


மத்தப்பட்டோர் அரியணையில் அப்பாவிகள் சிறையறையில்: மாவை.எம்.பி

E-mailஅச்சிடுகPDF
அரசினால் பாரிய குற்றம் சாட்டப்பட்டோர் இன்று அரசினால் செல்லப் பிள்ளைகளாகவும் முக்கிய பதிவியிலும்  தேர்தல் பட்டியலிலும் சேர்த்து வைத்திருக்கும் போது அப்பாவிக் கைதிகளை தொடர்ந்தும் விடுதலை செய்யாமல் வைத்திருப்பது அரசின் வஞ்சம் தீர்க்கும் நடவடிக்கையாகவே உள்ளது.

யாழ். சிறைச்சாலையில் விடுதலைக்கான தீர்ப்பு வழங்கப்பட்டும் அவர்களை இதுவரை விடுதலை செய்யாமல் சுமார் ஆறுமாதங்களுக்கு மேலாக அடைத்து வைத்திருக்கும் கைதிகள் இரண்டு நாட்களாக யாழ்.சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இக்கைதிகளை மாவை சேனாதிராசா எம்.பி இன்று பார்வையிட்ட பின்னர் தமிழ்.சி.என்.என்னுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.



அவர் மேலும் தெரிவிக்கையில்..

நீதிமன்றத்தினால் விடுதலை செய்வதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டும்  சட்டமா அதிபரின் அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறிக்கொண்டு அவர்களை இதுவரை விடுதலை செய்யப்படாமல் இருப்பது  ஏற்றுக்கொள்ளமுடியாத விடயமாகும்.

அரசுடனான பேச்சிலும் நாங்கள் கைதிகளின் விடுதலை தொடர்பாக பேசியிருந்தும் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்காதது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

மீண்டுமொருமுறை இக்கைதிகளின் விடுதலை தொடர்பாக நீதி அமைச்சுடனும் சட்டமா அதிபர் திணைக்களத்துடனும் பேசவுள்ளோம்.

யாழ். சிறைச்சாலையில் இவ்வாறு 28 கைதிகள் விசாரணை எதுவமின்றி தடுத்து வைத்திருப்பது போன்று பல ஆயிரக்கணக்கான இளைஞர்களும் பெண்களும் இதுவரை விசாரணை எதுவுமின்றியும் தீர்ப்பு வழங்கப்பட்டும் விடுதலை செய்யப்படாமலும் உள்ளனர்.

இதே வேளை வவுனியா தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின்  பெயர் விபரங்களை வெளியிடுவதாக அரசு கூறிவிட்டு அதனை தராமல்  ஏமாற்றுவது காணாமல் போனவர்களின் பெயர்பட்டியல் இன்னும் நீளமாக உள்ளதோ என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.

இப்பெயர்  விபரங்ளை தருவதாக மீண்டும் வாக்குறுதி அளித்துள்ளார்கள் அவ்வாறு தராவிடத்து  காணாமல் போனோர் கைதுசெய்யப்பட்டோர் விபரங்களை திறட்டி  மனித உரிமை ஆணைக்குழு . மன்னிப்புச்சபை என்பவற்றில் முறைப்பாடு செய்யவுள்ளோம் என்றார்.

மாவை.  சேனாதிராசா நாடாளுமன்ற உறுப்பினாருமான நேர்காணல் ..

யாழ். சிறைச்சாலையில் இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தீர்ப்பு வழங்கியும் விடுதலை செய்யப்படாதவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு.

பெயா                                            கைதுசெய்யப்பட்ட திகதி

ராயுசுரேஸ் கிருஸ்ரினா                        2006- 01-06
சுப்ரமணியம் செல்வநாயகம்                 2008-5-21
பிரியந்த நிமால் குணரத்ண                   2007-02-03
பத்மநாதன் தனபாலசிங்கம்                   2007-07-10
புவனேந்திரன் சதிஸ்வரன்                     2007-08-10
இராமையா கஜமோகன்                        2008-03-01
தங்கராசா விவேகானந்தராஜ்                2009-06-16
இராஜரட்ணம் பத்மநாதன்                     2009-08-19

இவர்களுடன் நடராஜா இராஜேஸ்வரி (26.12.2008) ஆகிய இரு பெண்களடங்களாக இன்னும் பலர் விசாரணைகளின்றியும் வருடக்கணக்காக இச்சிறைச்சாலைகளில் வாடுகின்றனர்.

அரசும் கூட்டமைப்பும் ஆரம்பத்தில் பேசிக்கொண்டதன் அடிப்படையிலான இவ்விடயங்களையே இந்த அரசால் நிறைவேற்றாமல் காலம் கடத்தும் போது தமிழருக்கான நியாயமான தீர்வை தருவதென்பது குதிரைக் கொம்புதான் என்பதே இன்று பலரின் கருத்தாகும்








ராஜீவ் படுகொலையை அரசியல் ஆக்க வேண்டாம்: ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் கண்டனம்

ராஜீவ் காந்தி படுகொலையை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம் என்று ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 
சென்னையில் 24.05.2011 அன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா, ராஜீவ்காந்தி கொலையில் திமுகவை தொடர்பு படுத்திப் பேசியதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி, ராஜீவ்காந்தி கொலை மிகவும் உணர்வு பூர்வமான நிகழ்வு. இந்த சம்பவம் நாடு முழுவதும் மட்டுமின்றி உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்திய நிகழ்வு. 
மிகவும் உணர்ச்சிகரமான அந்த துயரச் சம்பவத்தை யாரும் அரசியலாக்க முயற்சி செய்ய வேண்டாம். இதனை யாரும் அரசியலாக்க முயற்சிப்பதை காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது. இவ்வளவு பெயரி துயரச்சம்பவத்தை அரசியலாக்க முயற்சிப்பது கண்டனத்துக்குறியது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அச்சம்பவம் அரசியலாக்கப்படுவதில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.




ஜெயலலிதா ஆட்சி அமைய நாக்கை அறுத்து காணிக்கை செலுத்திய பெண்ணுக்கு அரசு வேலை!


அதிமுக ஆட்சி அமைய வேண்டி நாக்கை அறுத்து காணிக்கை செலுத்திய திருவாடனை தாலுகா தொண்டியை சேர்ந்த சரிதாவுக்கு சத்துணவு உதவியாளர் வேலை வழங்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவையும், எம்ஜிஆர் அறக்கட்டளை சார்பில் ஒரு லட்சம் ரூபாய் காசோலையையும் தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா மீண்டும் தமிழ்நாடு முதல் அமைச்சராக வரவேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை தாலுகா, தொண்டியைச் சேர்ந்த கே.சரிதா, தேனி மாவட்டம வீரபாண்டியில் உள்ள கவுரியம்மன் கோவிலில் 13ந் தேதி அன்று தனது நாக்கை அறுத்து நேர்த்திக் கடன் செலுத்தியுள்ளார்.

இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் இவர் கணவனால் கைவிடப்பட்டு ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருகிறார்.  இவர் தனது நாக்கை அறுத்து நேர்த்திக் கடன் செலுத்தியதை அறிந்ததும் ஆண்டிப்பட்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவியும், அதனைத் தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

முதல் அமைச்சர் ஜெயலலிதா இந்த நிகழ்வு குறித்து அறிந்ததும் பாதிக்கப்பட்ட கே.சரிதாவை உடனடியாக சென்னைக்கு வரவழைத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்து அறுவை சிகிச்சை செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கே.சரிதாவுக்கு தேவையான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்த பின்னர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

சரிதா கணவனால் கைவிடப்பட்ட நிலையில் அவரின் ஏழ்மையான குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு முதல்  அமைச்சர் ஜெயலலிதா 24ந் தேதி தலைமை செயலகத்தில் சரிதாவின் எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் சத்துணவுத் துறையில் சத்துணவு உதவியாளர் வேலைக்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.

இதன் மூலம் சரிதா மாத ஊதியமாக ரூ.2077 பெறுவார். மேலும் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையின் மூலம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சரிதாவின் சிகிச்சைக்கான முழுக்கட்டணத் தொகை 36,195 ரூபாய் செலுத்தவும் உத்தரவிட்டார்.
 
எம்.ஜி.ஆர். அறக்கட்டளை மூலம் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். இதைத்தவிர அவர் வசிப்பதற்கு சொந்த கிராமமான தொண்டியில் வாடகை வீடு ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான மாத வாடகையாக எம்.ஜி.ஆர். அறக்கட்டளையின் மூலம் தொடர்ந்து வழங்கிடவும் ஆணையிட்டார்.

முதல் அமைச்சரிடம் பணி ஆணையையும், நிதி உதவியையும் பெற்றுக் கொண்ட சரிதா, தான் நாக்கை அறுத்து நேர்த்திக் கடன் செலுத்தியதை அறிந்ததும் உடனடியாக மேல் சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்து தனக்கு தேவையான சிகிச்சையை அளித்ததற்கும், சத்துணவு உதவியாளர் பணி மற்றும் நிதி உதவிகளையும் வழங்கியதற்கு ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

மதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பை 75 சதவீதம் மக்கள் வரவேற்று உள்ளனர்: வைகோ

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடாமல் புறக்கணித்ததை 75 சதவீதம் மக்கள் வரவேற்று உள்ளனர் என, வைகோ பேசினார்.

ம.தி.மு.க. 18ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சிவகாசி பகுதியில் ம.தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது. விழாவில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார். பின்னர் ஆலங்குளம் டி.என்.சி. முக்குரோட்டில் ம.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வைகோ,

வெற்றி, தோல்விகளை சமமாக கருதுபவன் நான். என் அரசியல் பயணம் ஒளி மண்டலமாகவும், இருள் சூழ்ந்ததாகவும் இருந்து வருகிறது. 18 ஆண்டுகளுக்கு முன்பு கொலைப் பழி சுமத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட நாள் முதல் இன்று வரை எனக்கு மக்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

இதுவரை நாங்கள் யாரையும் பகைத்து கொண்டதில்லை. ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறேன். ஏனெனில் இதனால் அங்குள்ள மக்களுக்கு நோய்கள் ஏற்பட்டு வருவதோடு இயற்கை வளமும் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்கால தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகதான் இந்த போராட்டங்களை நடத்தி வருகின்றேன்.

இதுதொடர்பாக கோர்ட்டில் வாதாடும் போது, இந்த போராட்டத்தில் மக்கள் உங்களோடு சேர்ந்து ஏன் ஆதரவாக போராடவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினர். அதற்கு நான், சுதந்திரம் வேண்டும் என்பதற்காக 1000 பேர் தான் போராட்டம் நடத்தினார்கள். அதில் வெற்றியும் கண்டார்கள். உடன் சேர்ந்து போராடவில்லை என்பதற்காக அவர்கள் எனக்கு ஆதரவு தரவில்லை என்பதாக எடுத்துகொள்ள கூடாது என்றேன். இதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

ம.தி.மு.க. விடுதலைபுலிகளுக்கு ஆதரவான கட்சி என விமர்சனம் உள்ளது. நாங்கள் ஈழ மக்களுக்கு என்றும் ஆதரவாக இருப்போம். தமிழ்நாட்டில் வன்முறை இருக்ககூடாது என நினைப்பவர்கள் நாங்கள். இதனால் பல சந்தர்ப்பங்களில் நான் கைது செய்யப்பட்டபோது ம.தி.மு.க. வினர் எந்த வன்முறையிலும் ஈடுபட்டதில்லை.

மக்கள் நலனுக்காக ம.தி.மு.க. தொடர்ந்து போராடும். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடாமல் புறக்கணித்ததை 75 சதவீதம் மக்கள் வரவேற்று உள்ளனர். அதேநேரத்தில் இந்த தேர்தலில் பணம் மூலம் ஜனநாயகத்தை விலைக்கு வாங்க முடியாது என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர். இதற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

என்னை வருங்கால முதல் அமைச்சர் என சிலர் வரும்போது வாழ்த்தி கோஷம் போட்டனர். இது என் மீது உள்ள அன்பால், பாசத்தால் கூறுகிறார்கள் என்பதை உணர முடிகிறது. ஆனால் அதே நேரத்தில் புகழ் போதை பள்ளத்தில் தள்ளிவிட்டு விடும் என்பதால் அந்த வார்த்தையை நான் கவனத்தில் கொள்வது இல்லை.

ராமன் ராவணன் இடையே நடந்த யுத்தம் 18 மாதம் நடந்தது. குருஷேத்திர போர் 18 நாட்கள் நடந்தது. அதேபோல் ம.தி.மு.க. 18 ம் ஆண்டுவிழா தொடங்க விழாவை கொண்டாடி வருகிறோம். நேர்மையான, ஊழலற்ற, சுயநலமற்ற அரசியல் நடத்தி தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவோம். இவ்வாறு வைகோ பேசினார்.

ஐபிஎல்: இறுதிபோட்டியில் சென்னை அணி




ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 24.05.2011 அன்று மும்பையில் நடந்த முதலாவது  பிளே ஆப்' சுற்று ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. 
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரிடையாக ‌இறுதி போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது. டாஸ்வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. 
இதனையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 19.4 ஓவரில் 177ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்‌ போட்டியில் நுழைந்தது.

24 மே, 2011


ஈ.பி.டி.பியின் மண் அகழ்வு மோசடி- மேல் முறையீட்டு நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது!

Published on May 23, 2011-3:26 pm   ·   No Comments
வடமராட்சி கிழக்கு அம்பன் குடத்தனை மணல்காடு பகுதிகளில் சட்டவிரோதமக மண் அகழ்ந்தெடுக்கப்படுவதற்கு எதிராக யாழ்ப்பாண குடிமகன் ஒருவர் தாக்கல் செய்துள்ள முறைப்பாடு குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் பிரதிவாதிகளிடமிருந்து பதிலை கோரியுள்ளது.
பதில் அறிக்கை ஜூன் மாதம் 13 ஆம் திகதி மன்றில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அக்டோபர் 2010 இல் புவியியல் அளவை மற்றும் மண் அகழ்வு பணியகம் வெளியிட்ட சுற்று நிருபம் புஆஃஊஆஃஏஆஃ09 இன்படி, மண் அகழ்வில் ஈடுபடும் யாழ்ப்பாணம் குடிமக்கள் எவரும் கிராமசேவை உத்தியோகத்தர் ஊடாக மாவட்டச்செயலாளருக்கு தங்கள் தேவைகள் பற்றி தெரிவித்து அதற்கான அனுமதி பெற்று இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் யாழ். மாவட்ட செயலாளர் மண் அகழ்வு அனுமதிப்பத்திரத்தை வழங்கும் அதிகாரத்தை ஈ.பி.டி.பி கட்சியின் கீழ் செயற்படும் மகேஸ்வரி நிதியம் என்ற அமைப்பிற்கு வழங்கி உள்ளது. இது அரசாங்க சுற்று நிருபத்திற்கு முரணானது என முறைப்பாட்டாளர் நீதிமன்றத்தில் செய்த தாக்கல் செய்த வழக்கில் தெரிவித்துள்ளார்.
அச்சுற்றுநிருபத்தின்படி, மண் அகழ்வில் ஈடுபடுபவர்கள் ஒரு கியூப் மண்ணுக்கு 286
ரூபா அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மகேஸ்வரி நிதியம் ஒரு கியூப் மண்ணுக்கு 13,400 ரூபா அறவிடுகின்றது. போக்குவரத்து வசதிகளையும் மகேஸ்வரி நிதியம் செய்து கொடுப்பதால் மண் அகழ்வில் ஈடுபடுபவர்கள் ஒவ்வொரு கியூப்
மண்ணுக்கும் மேலதிகமாக 19,000 ரூபா செலுத்த வேண்டியுள்ளது. மாதாந்தம் மகேஸ்வரி நிதியம் சட்டவிரோதமான முறையில் கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பாதிப்பதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் குடிமகன் தாக்கல் செய்திருக்கும் முறைப்பாட்டில் ( முறைப்பாட்டு இலக்கம் ஊயு674ஃ2010)  யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர், நல்லூர் பிரதேச செயலாளர், மகேஸ்வரி நிதிய இணைப்பாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இவர்கள் யூன் 13ஆம் திகதிக்கு முதல் முறைப்பாட்டிற்கான பதிலை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர்கள் யூன் 13ஆம் திகதிக்கு முதல் முறைப்பாட்டிற்கான பதிலை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈ.பி.டி.பியினர் மண் அகழ்வில் ஈடுபடுவதால் அக்கிராமங்கள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  இந்த விடயத்தை சுட்டிக்காட்டிய அம்பனைச்சேர்ந்த கேதீஸ்வரன் தேவராஜன் என்ற இளைஞரை அம்பன் கிராமத்தில் அவரது வீட்டில் வைத்து ஈ.பி.டி.பியினர் சுட்டுக்கொலை செய்திருந்தனர்.
Share

மட்டக்களப்பில் மீண்டும் இராசதுரையின் பிரசன்னம்!

Published on May 24, 2011-6:06 pm   ·   No Comments
நீண்டகாலமாக அரசியலில் ஈடுபடாது அஞ்ஞாதவாசம் செய்த மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரை கடந்த 22 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் மட்டக்களப்புக்கு வந்துள்ளார்.
நீண்டகாலமாக மலேசியாவில் தங்கியிருந்த அவர் அண்மையில் மட்டக்களப்பு வந்துள்ளார். தற்போது மட்டக்களப்பு நகரில் தங்கியிருக்கும் அவர் தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோரை சந்தித்து சமகால அரசியல் நிலமைகள் குறித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு பற்றி தந்தை செல்வா கொண்டிருந்த இலக்கு பற்றியும் நினைவு கூர்ந்தார்.
இதே வேளை ஆன்மீகத் தலைவர்கள் சமூகப் பிரமுகர்களைச் சந்தித்து வரும் இவர் தனது கடந்த கால அரசியல் ஆதரவாளர்களையும் சந்தித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள சர்வ மதத் தலங்களையும் தரிசித்து வரும் இவர் கொத்துக்குளம் முத்துமாரியம்மன் ஆலயம், அரசடி பிள்ளையார் ஆலயம், கோட்டமுனை அவுலியா பள்ளி வாசல், புளியந்தீவு அந்தோனியார் ஆலயம் ஆகியவற்றிற்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
அவர் 1956ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு தொகுதியின் முதலாவது நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டது தொடக்கம் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல் வரைக்கும் உள்ள 5தேர்தல்களிலும் வெற்றி பெற்று 33ஆண்டுகளாக மட்டக்களப்பு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
1979ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக்கூட்டணி தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அரசாங்கத்துடன் இணைந்து பிரதேச அபிவிருத்தி இந்து கலாச்சார அமைச்சரானார்.

யாழ். மாவட்ட வாக்காளர் பட்டியிலிலிருந்து வெளிநாட்டில் வசிப்பவர்களின் பெயர்கள் நீக்கம்!

Published on May 24, 2011-5:08 pm   ·   No Comments
யாழ். மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்குப் புலம் பெயந்தவர்கள் என யாழ். மாவட்டத் தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வாக்காளர் பட்டியல் மீளாய்வுப் பணிகள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்று தற்போது பட்டியல் தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.   இதுவரை மேற்கொள்ளப்பட்ட மீளாய்வுகளின்படி சுமார் 4 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்களின் விவரங்கள் நீக்கப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்குச் சென்று அங்கு வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளவர்கள் மரணமானவர்கள். அத்துடன் இங்கிருந்து புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்பவர்கள் ஆகியோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இதில் வெளிநாடுகளில் உள்ளவர்களின் பெயர்களே அதிகளவில் நீக்கப்பட்டிருப்பதாகவும் வெளிநாடுகளில் உள்ள சுமார் 3 இலட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ad

ad