புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2024

இனப்படுகொலை, பொதுசன வாக்கெடுப்பு - அமெரிக்க காங்கிரசில் பிரேரணை!

www.pungudutivuswiss.com

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களிற்கு எதிரான இனப்படுகொலையில் ஈடுபட்டது என்பதை அமெரிக்க காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவேண்டும்  ஈழத்தமிழர்களிற்கான சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதை நோக்கிய செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும் என கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களிற்கு எதிரான இனப்படுகொலையில் ஈடுபட்டது என்பதை அமெரிக்க காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவேண்டும் ஈழத்தமிழர்களிற்கான சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதை நோக்கிய செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும் என கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

அமெரிக்க பிரதிநிதிகள் சபை பிரதிநிதி விலே நிக்கெல் இந்த தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளார். அமெரிக்க காங்கிரஸில் இவ்வாறான தீர்மானம் சமர்ப்பிக்கப்படுவது இது முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவளிப்பதன் மூலம் நிரந்தர சமாதானத்திற்காக சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பிற்கு ஆதரவளிப்பதன் மூலம் தமிழர்கள் இனப்படுகொலை உட்பட வன்முறைகள மீள நிகழாமையை உறுதி செய்யவேண்டும் என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad