லண்டனில் இலங்கைத் தமிழர் வீட்டில் 200 பவுண் நகை மற்றும் 18 ஆயிரம் பவுண்ட்ஸ் பணம் கொள்ளை
பிரித்தானியா, வோலிங்டன் (சட்டன்) பகுதியில் ஈழத் தமிழர் வீடொன்றில் பகல் பதினொரு மணிமுதல் ஒருமணிக்குள் உள்புகுந்த திருடர்கள் அங்கிருந்த இருநூறு பவுண் நகைகள் பதினெட்டாயிரம் பவுண்டுகள் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
நேற்று முன்தினம் நடைபெற்ற இச்சம்பவத்தின்போது ஆறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்ட இந்த பணத்தினையே குறித்த திருடர்கள் மோப்பம் பிடித்து கொள்ளையடித்துள்ளனர்.