புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 அக்., 2012


நீதிமன்றத்திற்கு தலைவணங்கி நித்தியானவந்தாவை நீக்கினேன் :
அருணகிரி அதிரடி பேட்டி
நித்தியானந்தாவை நீக்கம் செய்த பிறகு மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்தார்.நீத்தியானந்தாவை ஏன் நீக்கினீர்கள்?
நீதிமன்றத்திற்கு தலைவணங்கி இப்போதுள்ள வழக்கு சூழ்நிலை கருதி நித்தியானவந்தாவை நீக்கினேன்.

நித்தி நீக்கம் : அருணகிரிநாதர் அதிரடி அறிவிப்பு
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் இன்று இரவு அதிரடி அறிவிப்பு வெளியிட்டார்.ஆதீனத்தின் வாரிசாக எம்மால் 23 .4.2012ம் நாள் நியமிக்கப்பட்டு 27.4.2012 ஆவணத்தின் மூலம் உறுதி செய்யப்பட்ட பெங்களூர் ஆசிரம பீடாதிபதி நித்தியானந் தாவை இன்று 19.10.2012 முதல் வாரிசாக பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டதாக இந்த அறிவிப்பின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் அறிவித்தார்.

என் உயிருக்கு ஆபத்து ; நித்தி சீடர்களை வெளியேற்றுங்கள்: மதுரை ஆதீனம் போலீசில் பரபரப்பு புகார்
மதுரை ஆதீனம் இன்று இரவு 8 மணிக்கு மதுரை விளக்குத்தூண் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்று அளித்துள்ளார்.அம்மனுவில்,  ‘’நித்தியானந்தாவை நான் மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாகநியமித்தேன்.    சில காரணங்களால் நாளை நான்,  நித்தியானந்தாவை மதுரை ஆதீனம் பொறுப்பில் இருந்து நீக்குவது என்று முடிவெடுத்திருக்கிறேன். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்துகின்றனர்: யாழ். பொலிஸ்மா அதிபர் புகழ்ச்சி
யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சரியான முறையில் சட்டத்தை அனுசரித்து, கடைப்பிடித்து நீதியாக நடந்து கொள்வதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.

15 வயது சிறுமி மீது பாழடைந்த வீட்டுக்குள் வல்லுறவு! 19 வயது இளைஞன் கைது! யாழ்.இளவாலையில் சம்பவம்!
யாழ்ப்பாணம், இளவாலைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது நிரம்பிய சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 19 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.

புலிகளின் நிதிப் பொறுப்பாளர் ரத்னசபாபதி விடுதலை செய்யப்பட்டுள்ளார்: திவயின
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதிப் பொறுப்பாளர் ரத்னசபாபதி விடுதலை செய்யப்பட்டுள்ளார் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நடிகை திரிஷா தந்தை மாரடைப்பால் திடீர் மரணம்
 

நடிகை திரிஷா தந்தை கிருஷ்ணன்(68) மாரடைப்பால் மரணம் அடைந்தார்.  கிருஷ்ணன் சென்னை ஓட்டல்களில் மானேஜராக பணியாற்றி வந்தார். திரிஷா முன்னணி நடிகையானதும் ஓட்டல் வேலையை விட்டு விடும்படி வற்புறுத்தினர். அவர் கேட்க வில்லை.
 

தீக்குளித்த கணவனை கட்டிப்பிடித்த காதல் மனைவியும் உயிரிழந்தார்
குடும்ப பிரச்னையில் தீக்குளித்த கணவனை கட்டிப்பிடித்த காதல் மனைவியும் இறந்தார். 
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த உடையாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் கமலஹாசன், 34. இவர் செஞ்சியை அடுத்த காரை பகுதியில் ஸ்டேட் பேங்கின் வாடிக்கையாளர் சேவை முகவராக பணிபுரிந்து வந்தார். 

கனேடிய அமைச்சரால் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள்! (பட இணைப்பு)


பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபத் பதவி ஏற்று 60 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக 60000 கனேடிய மக்களுக்கு Diamond Jubilee விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
இதில் ஒன்ராறியோவைச் சேர்ந்த 14 பேருக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை வைர விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.


திருப்பதிக்கு அதிக எண்ணிக்கையில் வருகை தரும் தமிழக பக்தர்களை கெளரவிக்கும் விதமாக திருப்பதி தேவஸ்தானம் அமைப்பு பிரம்மோஸ்தவப் பாடல்களை அழகு தமிழில் வெளியிட்டுள்ளது.திருப்பதியில் பிரம்மோஸ்தவம் வெகுவிமரிசையாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் திரையுலகின் மூத்த கவிஞர் வாலி எழுதிய முத்தான பத்து

காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்

kannadasanகவியரசர் கண்ணதாசன் இன்றைய தமிழக மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் வாழக் கூடிய கவிஞர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள் பெருந்தலைவர்கள் அனைவரும் போற்றி நிற்கும் மாபெரும்  கவிஞர் தனது சொந்த அனுபவங்களை வாழ்க்கையில் தான் அனுபவித்த இன்ப துன்பங்களை திரையிசைப் பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய மாபெரும் கவிஞர். இன்றும் அவரது திரையிசைப் பாடல்களை வானொலியில், காண் ஒளியில் நாம் கேட்டும் பார்த்தும் மகிழ்கின்றோம். எமது வாழ்வில் சோதனையும் வேதனையும்  வரும் போது கவியரசரின் தத்துவப்

பாலைவனத்தில ஆடை மாற்றிய இலியானா! (வீடியோ இணைப்பு)

அண்மையில் வெளிவந்து சக்கை போடு போட்ட நண்பன் திரைப்படத்தில் நடித்த இலயானாவை முன்பிருந்தே அறியாதவர்கள் இருக்க முடியாது. இவர் திரையுலகின் மெல்லியை அழகி என சிம்ரனிற்கு நிகராகப் பெயர் பெற்றவர்.

18 அக்., 2012


சிங்கப்பூர், ஐரோப்பிய பாணியில் கொழும்பில் அதி நவீன வீதி போக்குவரத்து நடைமுறை

சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகளைப் போன்று அதி நவீன வீதி போக்குவரத்து நடைமுறையை கொழும்பிலும், அதன் அயல் நகரங்களிலும் முன்னெடுக்க இலங்கையின் போக்குவரத்து அமைச்சு பாரிய திட்டங்களை வகுத்துள்ளது.
யுத்தம் முடிவுற்ற பின்னர் கொழும்பு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதனால் இத்திட்டம் அதிக முக்கியத்துவம் பெறுவதுடன் வாகன நெரிசல் விபத்துக்கள்

துரை தயாநிதியை கைது செய்ய நவம்பர் 2-ம் தேதி வரை தடை: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
துரை தயாநிதியை கைது செய்ய நவம்பர் 2-ம் தேதி வரை தடை: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரையில் ஒலிம்பஸ் கிரானைட் 

கிரானைட் கற்களை வெட்டி எடுத்து கடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.   
இதையடுத்து துரை தயாநிதி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால்,


கலைஞர் நேரில் ஆஜராக செசன்சு கோர்ட் சம்மன்
தமிழக அமைச்சர்கள் தொடர்ந்த அவதூறு வழக்குகளுக்காக, டிசம்பர் 18–ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞருக்கு சம்மன் அனுப்பி சென்னை மாவட்ட செசன்சு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

மதுரை ஆதீன பொறுப்பில் இருந்து நித்தி ராஜினாமாவா?
நித்தியானந்தா மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.   அவர் அடுத்த மதுரை ஆதீனம் ஆகக்கூடாது என்று பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

மதுரை ஆதீன மடத்தை அரசிடம் ஒப்படைக்கக் கோரிக்கை
இந்து அறநிலையத்துறை ஆணையர் தனபால் சார்பில் மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மதுரை ஆதீன மடத்தின் இளைய பட்டமாக நியமனம் செய்யப்பட்ட நித்தியானந்தாவின் நியமனம் செல்லாது என்று தமிழக

16 ஆண்டாக படுக்கையில் இருக்கும் வாலிபரை காதலித்து மணந்த இளம்பெண் 
தக்கலை மருதூர்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் உல்லியம். கூலி தொழிலாளி. இவரது மனைவி அன்னம்மாள். இவர்களுக்கு கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு  விஜயகுமார், ஜெயகுமார் என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். 10-வது வயதில் விஜயகுமார், ஜெயகுமாரை மர்ம நோய் தாக்கி இருவரும் படுத்த படுக்கையானார்கள்.  


6 பேர் கொண்ட கும்பல் என்னை இணையதளத்தில் அசிங்கப்படுத்துகிறது : பாடகி சின்மயி பரபரப்பு புகார்


’சர சர சார காத்து’ பாடல் இன்னனும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.   வாகைச்சூடவா படத்தில் வரும் இந்தப்பாடலை பாடியவர் பாடகி சின்மயி.   'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் வரும் 'ஒரு தெய்வம் தந்த பூவே' பாடல் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. தொடர்ந்து 7 மொழிகளில் 600-க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி முன்னணி பாடகியாக இருக்கிறார்.
தமிழ் சொந்தங்கள் செத்து விழுந்த போது இளையராஜா குரல் கொடுக்கவில்லை; சீமான் குற்றச்சாட்டு
தமிழ் சொந்தங்கள் செத்து விழுந்த போது உணவுக்கோ, மருந்துக்கோ, துணிக்கோ இந்த இளையராஜா கச்சேரி நடத்தி உதவி செய்ய முன்வரவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் கடைசி நேரத்தில் நடேசன் வெள்ளைக் கொடியுடன் போன போது அவரை சுட்டு கொன்றார்கள். இதை பார்த்து சிங்களப் பெண் நடேசன் மனைவி சிங்களத்தில் அவர்களிடம் நியாயம் கேட்டார்.

ad

ad