புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 அக்., 2012


தீக்குளித்த கணவனை கட்டிப்பிடித்த காதல் மனைவியும் உயிரிழந்தார்
குடும்ப பிரச்னையில் தீக்குளித்த கணவனை கட்டிப்பிடித்த காதல் மனைவியும் இறந்தார். 
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த உடையாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் கமலஹாசன், 34. இவர் செஞ்சியை அடுத்த காரை பகுதியில் ஸ்டேட் பேங்கின் வாடிக்கையாளர் சேவை முகவராக பணிபுரிந்து வந்தார். 

இவரும் அதே ஊரை சேர்ந்த எத்திராஜ் மகள் மீரா, 24 என்பவரும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மோகனபிரியா, 3 தீபலட்சுமிஎன்ற குழந்தைகள் உள்ளனர். 
நேற்று (18ம் தேதி) காலை மீராவின் தந்தை எத்திராஜுக்கு சாப்பாடு கொண்டு செல்லும்படி மீராவிடம் கமலஹாசன் கூறியுள்ளார். ஆனால் மீரா பகல் 1 மணிக்கு பிறகு சாப்பாடு கொண்டு சென்றுள்ளார். வேலைக்கு சென்று திரும்பிய கமலஹாசன், இது குறித்து மீராவிடம் கேட்டுள்ளார். பின்னர் என் பேச்சை நீ கேட்காதபோது, நான் எதற்கு உயிரோடு இருக்க வேண்டும் என கூறி மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். இதை பார்த்த மீரா நீங்களே இல்லாதபோது நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும் என ஓடிச் சென்று கமலஹாசனை கட்டிப்பிடித்து கொண்டார். இதனால் இருவரும் பலத்த தீக்காயமடைந்தனர். இவர்களை உடனே செஞ்சி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து சென்னை கொண்டு செல்லும் வழியில் மீராவும், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கமலஹாசனும் இறந்தனர். இது குறித்து வளத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

ad

ad