புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 அக்., 2012


நீதிமன்றத்திற்கு தலைவணங்கி நித்தியானவந்தாவை நீக்கினேன் :
அருணகிரி அதிரடி பேட்டி
நித்தியானந்தாவை நீக்கம் செய்த பிறகு மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்தார்.நீத்தியானந்தாவை ஏன் நீக்கினீர்கள்?
நீதிமன்றத்திற்கு தலைவணங்கி இப்போதுள்ள வழக்கு சூழ்நிலை கருதி நித்தியானவந்தாவை நீக்கினேன்.


மடத்திற்குள் இருந்த நித்தி சீடர்களை ஏன் உடனடியாக வெளியேற்றினீர்கள்?
இன்று இரவுக்கு அவர்களால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று வெளியேற்றினேன்.

பொருப்பில் இருந்து நீக்கியதால் நித்தியானந்தா மிரட்டினாரா?
என்னை மிரட்டவில்லை; மிரட்ட மாட்டார் என்று நினைக்கிறேன்.
பொருப்பில் இருந்து நித்தியானந்தாவை நீக்கியபின் அவர் தங்களை தொடர்புகொண்டாரா?
நான் அவரை தொடர்புகொண்டேன்.  அவர் செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதுவரை இரண்டு இளைய ஆதீனங்களை நீக்கியிருக்கிறீர்களே? இந்த முடிவும் நிரந்தமானதா?
இந்த முடிவு நிரந்தமானதுதான்.

நித்தியானந்தா நீக்கத்திற்கு பிறகு மற்ற ஆதீனங்கள் உங்களை தொடர்புகொண்டார்களா?
இனிமேல்தான் தெரியும்.

இந்த விசயம் தொடர்பாக தமிழக முதல்வரை சந்திப்பீர்களா?
வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன்

ad

ad