புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2012


இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களான ரிலையன்ஸ் நிறுவன தலைவர்கள் முகேஷ் மற்றும் அனில் அம்பானியின் சுவிஸ் கணக்கு எண்கள் வெளியாகியுள்ளன.
சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள H.S.B.C., வங்கியில் அம்பானி சகோதர்கள் வரி கட்டாமல் முறைகேடாக பதுக்கப்பட்ட கறுப்புப்பணம் இருப்பதாக இந்தியாவின் ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார்.இந்நிலையில் அவர்களது கணக்கு எண்களான 5090160983 மற்றும் 5090160984 ஆகியவற்றை கெஜ்ரிவால் நேற்று வெளியிட்டார்.

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட சீனர்கள் கைது
இலங்கையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுற்றுலா வீசாக்களின் மூலம் நாட்டுக்குள் பிரவேசித்து சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழர் பகுதிகளிலிருந்து சிங்கள ஆக்கிரமிப்புப் படை முற்றாக வெளியேற்றப்படுவதே ஒரே வழி!– பிரதமர் உருத்திரகுமாரன்
தமிழர் தாயகத்தில் சிங்களப் படையினர் நிலைகொண்டிருக்கும் வரை தமிழ் மக்களுக்கு ஜனநாயகவெளியோ பாதுகாப்புணர்வோ கிடைக்கப்போவதில்லை. சிங்களப் படையினர் தமிழர் தாயகப் பகுதியில் இருந்து முற்றாக வெளியேறல் அவசியமானதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்

இறந்த தலைவருக்கு வீர வணக்கம் செய்யாதவன் மனிதனே அல்ல!- சீமான் ஆவேசம்
இனத்துக்காக போராடிய பெருந்தகைகளுக்கு மரணத்தின் பின் வீரவணக்கம் செலுத்தாதவன் உண்மைத் தமிழன் அல்ல என்பதற்கு மேலாக, அவன் மனிதனே அல்ல. கீழ்த்தரமான அவனை சரித்திரம் மன்னிக்காது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்

கல்முனையில் 13 அடி நீளமான முதலை பிரதேச மக்களால் பிடிப்பு
கல்முனை, மருதமுனை பிரதேச கடற்கரையில் இன்று 13 நீளமான முதலை ஒன்று பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது.
தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனத்தையே இல்லாமல்

செய்யும் இன்னொரு கொடூர யுத்தம்!

தமிழீழ விடுதலைப் போராட்டம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட பின்னர் தற்போது தமிழர் தாயகத்தில் புதிய யுத்தங்கள் முளைவிட்டுள்ளன. விடுதலைப் போராட்ட காலத்தில் சிறீலங்கா அரசு முன்னெடுத்த இன அழிப்பு யுத்தத்தை காட்டிலும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற யுத்தம் கொடூரமானது. இந்த யுத்தம் இன்னும் சில காலம் நீடிப்பதற்கு நாம் அனுமதிப்போமாயின் ஈழத் தமிழ் மக்கள் தமது அடையாளத்தை இழந்துவிடுவர்.

குஜராத் செல்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா
குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக நரேந்திர மோதி வரும் 26-ம் தேதி மீண்டும் பதவி ஏற்கிறார்.நான்காவது முறையாக குஜராத் முதலமைச்சராகப் பதவியேற்கும் நரேந்திர



இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்து நாடு திரும்பிய பெண்ணொருவர் தனது உயிரிழந்த இரண்டு மாத குழந்தையுடன் கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கையர்களில் 21 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர். இந்த நாடு திரும்பிய குழுவினருடனே குறித்த பெண் தனது குழந்தையின் சடலத்தையும் கொண்டு வந்துள்ளார்.


எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதம் 2013 இல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. நீதியை வேண்டி நிற்கும் ஈழத்தமிழர்களுக்கு இம்முறை ஐ.நா களம் அமைத்துக்கொடுக்கும் ஒரு முக்கிய காலமாக எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால் இப்போர்க்குற்ற விசாரணைகளையும் தாண்டி தமிழர்களுடைய வேண்டுகோளென்பது நிரந்தர அரசியல் தீர்வை நோக்கியதாக அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் தம்மைத் தாமே ஆராயுமுகமாக வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில்,

சமீபத்தில் கனடா நாட்டில் நடந்த கொலை ஒன்று, தமிழர்களின் சம்பிரதாய கல்யாணங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது. 21 வயதான அனுஜா வின் வாழ்க்கை அவரைச் சுழவுள்ள உறவினர்களால் சீரழிக்கப்பட்டுள்ளதா என்ற விவாதங்களும் நீதிமன்றில் எழுந்துள்ளது.Photos
சுருக்கமாகச் சொல்லப்போனால், பேசிக் கலியாணம் செய்வது என்று சொல்லுவார்கள். ஒருவரை ஒருவருக்குத் தெரியாமல், இடைத் தரகர் ஒருவர் ஊடாகப் பேசி, பின்னர்

21 டிச., 2012


தமிழ் நாட்டில் மேலும் மூன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் செயற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் என்று கூறப்படும் நான்கு பேர், கடந்த புதன்; கிழமை தமிழக காவற்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.குறித்த மூன்று பேருள் ஒருவர், மதுரையில் இருப்பதாகவும், அவர்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் ஒன்றிணைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாகவும்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் அவரின் ஆட்சி விரைவில் அமையும் எனவும் கைது செய்யப்பட்ட பல்கலைக் கழக மாணவர்கள் கூறிவருகின்றனர் என யாழ் மாவட்ட கட்டளை தளபதி ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழக சமூகத்திற்கும் யாழ் மாவட்ட கட்டளை தளபதிக்கும் இடையில் இன்று காலை 10 மணியளவில் பலாலி படைத் தலமையத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.  இச்சந்திப்பின்போதே 

தனது கணவர் ஏன் இறந்தார் என்பத குறித்து, பாடகி நித்யஸ்ரீயின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது போலீஸ். “கணவர் ஆற்றில் குதித்த விபரம் அறிந்தவுடன் நானும் அடையாறு பாலத்துக்கு ஓடிச் சென்றேன். அங்கே அப்போது அவரது உடல் கிடைத்திராத காரணத்தால், எப்படியும் அவர் உயிரோடு வருவார் என்று நம்பி…திரும்பி விட்டேன்” என்று அவர் தன் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 ஆனால், நித்யஸ்ரீ வீடு திரும்பியபின், அவரது கணவர் மகாதேவன் இறந்து விட்டதாக தகவல் வந்து சேர்ந்ததாக சொல்கிறது, அவரது வாக்குமூலம். “தன் தாயார் மீது அளவுக்கதிகமான பாசம் வைத்திருந்த மகாதேவன், அவர் இறந்ததைத் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார்” என்பதே வாக்குமூலம்

மாணவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்பது கனவிலும் கூட நடக்காது! யாழ். படைத்தளபதி ஹத்துருசிங்க
பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யும் வரை யாழ் பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என மாணவர்கள் காத்திருப்பது கனவிலும் கூட நடக்காது என யாழ் மாவட்ட கட்டளை தளபதி ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

பந்தல் சேதமாக்கப்பட்ட போதிலும்,அடக்குமுறைக்கு எதிராக த.தே.கூட்டமைப்பின் உண்ணாவிரதம் ஆரம்பம்
கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரியும் அப்பாவி பொதுமக்களை காரணமின்றி கைது செய்து, தடுத்து வைத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

ஐரோப்பாவிற்கு விஜயம் செய்ய உள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இரண்டு வாரங்கள் அங்கு தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பாரியார் மைத்திரி விக்ரமசிங்கவும் இந்த விஜயத்தில் இணைந்து கொள்வார் எனக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம்!
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் இணங்கும் வரையில் அந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடுவதை அவுஸ்திரேலிய அரசாங்கமும் கிரிக்கெட் சபையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்


கனடாபுங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் பூவரசம்பொழுது  புகைப்படங்கள் கீழே அழுத்தவும் 
நாசா விண்வெளி மறுப்பு:அமெரிக்காவின் "நாசா' விண்வெளி ஆய்வு மையம் இதை மறுத்துள்ளது.
எரிமலை சீற்றம், சூரிய காந்த புயல், கோள்களின் மோதல், விண்கற்களின் தாக்குதல், சுனாமி உள்ளிட்ட பல காரணங்களால், உலகம் அழிவதற்கான வாய்ப்புகள் உள்ளன.ஆனால், மேற்கண்ட சம்பவங்கள் ஒரே நேரத்தில் நிகழ்ந்தால் தான் உலகம் அழியும்.

ad

ad