புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2012




இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்து நாடு திரும்பிய பெண்ணொருவர் தனது உயிரிழந்த இரண்டு மாத குழந்தையுடன் கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கையர்களில் 21 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர். இந்த நாடு திரும்பிய குழுவினருடனே குறித்த பெண் தனது குழந்தையின் சடலத்தையும் கொண்டு வந்துள்ளார்.

வவுனியாவைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண்ணுக்கு தமிழக அகதி முகாமில் குழந்தை பிறந்துள்ளது. பிரசவிக்கப்பட்ட குழந்தை சுகவீனமுற்ற நிலையில் இருந்துள்ளது.
இந்நிலையில், குறித்த பெண் நாடு திரும்பியபோது, குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தவுடன், விமான நிலைய அதிகாரிகள் குறித்த பெண்ணை குழந்தையின் சடலத்துடன் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad