புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 டிச., 2012


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் அவரின் ஆட்சி விரைவில் அமையும் எனவும் கைது செய்யப்பட்ட பல்கலைக் கழக மாணவர்கள் கூறிவருகின்றனர் என யாழ் மாவட்ட கட்டளை தளபதி ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழக சமூகத்திற்கும் யாழ் மாவட்ட கட்டளை தளபதிக்கும் இடையில் இன்று காலை 10 மணியளவில் பலாலி படைத் தலமையத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.  இச்சந்திப்பின்போதே 
தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் அவரின் ஆட்சி விரைவில் அமையும் எனவும் கைது செய்யப்பட்ட பல்கலைக் கழக மாணவர்கள் கூறிவருகின்றனர் என யாழ் மாவட்ட கட்டளை தளபதி தெரிவித்துள்ளார்.


இதனாலே இவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவே பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்தபின்பு தான் யாழ் பல்கலைக்கழக செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என மாணவர்கள் காத்திருப்பது கனவிலும் கூட நடக்காது எனவே விரைவாக கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோரிடம் விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இல்லை என அவர்களை சந்திக்கப் போகும் போது எடுத்துக் கூறுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


ad

ad