-
17 ஜன., 2013
மட்டக்களப்பில் தமிழ்-முஸ்லிம் இனவாதத்தை தூண்ட வேண்டாம் - கூட்டமைப்பிடம் அமீர் அலி கோரிக்கை
14.01.2013 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் ஒன்றிணைந்து பத்திரிகை மாநாடு ஒன்றினை நடாத்தி முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க முற்பட்டதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீது அமீர்அலி குற்றம் சாட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, மேற்படி பத்திரிகையாளர் மாநாடு தமிழ் மக்களுக்கு பிழையான வழிகாட்டலையும், தமிழ் முஸ்லிம் உறவை மீண்டும் சீர் குலைக்க எடுக்கும் நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார்.
இறைவா! இந்தக் கொடுமையை யாரிடம் போய்ச்
சொல்லவொம்.தமிழ்நாட்டு அகதி முகாம்களில்
ஈழத் தமிமிழிச்சிகளுக்கு நடக்கும் கொடுமை! கொடுமை!
கொடுமை! பல வருடங்களாய் பலமுறை சுட்டிக்காட்டிய போதும் கண்டு கொள்ளாத தமிழக அரசியல் சக்திகள்.
------------------------------ ------------------------------ ----------------
இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் வசிக்கும் பெண்களை கியூ பிராஞ்ச் போலீசார் பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்து, சாதாரண முகாம்களில் உள்ள தங்கள் சொந்தங்களுடன் வாழ அனுமதிக்கக் கோரி ஈழத்தமிழ் சொந்தங்கள் 9 பேர் 24 நாட்களாக பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். முகாம்களில் வாழும் பெண்களை புணர்ச்சிக்கு அழைப்பது, அவர்கள் எதிர்க்கும்போது, உங்கள் அண்ணன், தம்பிகளை சிறப்பு முகாம்களில் அடைத்து விடுவோம் என்று மிரட்டுவது என்று கியூ பிரிவினரின் அராஜக நடவடிக்கைகள் இருக்கின்றன. இதுபோன்ற காரணத்தினால்தான் நாங்கள் கடலில் செத்தாலும் பரவாயில்லை என்று வேறு நாடுகளுக்கு தப்பி செல்கிறோம் என்று நம் சொந்தங்கள் கூறுவதை கேட்க வருத்தமாகவும், வெட்கமாகவும் இருக்கிறது.
அவ்வப்போது 4 பேர், 5 பேர் என்று விடுதலை செய்யப்படுகிறார்கள். அடுத்த சில நாட்களிலேயே மேலும் சில ஈழத்தமிழ் மக்களை, குறிப்பாக இளையோரை பிடித்துக் கொண்டு வந்து சிறப்பு முகாம்களில் அடைத்து விடுகின்றனர். எனவே தமிழக முதல்வர் மனிதாபிமான நோக்கோடு இதில் தலையிட்டு, செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அயல் நாட்டவர் சட்டத்தினை ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு எதிராக எப்படி கியூ பிரிவு தவறாக பயன்படுத்தி வருகிறது என்பதை சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி அறிந்துகொள்ள வேண்டும்.
முதல்வர், கியூ பிரிவினரின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது. இதற்கு விடிவு பிறக்க வில்லையெனில், கடுமையான ஒரு போராட்டத்தில் குதிப்பதைத் தவிர நாம் தமிழர் கட்சிக்கு வேறு வழியில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்."என்று அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.
சொல்லவொம்.தமிழ்நாட்டு அகதி முகாம்களில்
ஈழத் தமிமிழிச்சிகளுக்கு நடக்கும் கொடுமை! கொடுமை!
கொடுமை! பல வருடங்களாய் பலமுறை சுட்டிக்காட்டிய போதும் கண்டு கொள்ளாத தமிழக அரசியல் சக்திகள்.
------------------------------
இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் வசிக்கும் பெண்களை கியூ பிராஞ்ச் போலீசார் பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்து, சாதாரண முகாம்களில் உள்ள தங்கள் சொந்தங்களுடன் வாழ அனுமதிக்கக் கோரி ஈழத்தமிழ் சொந்தங்கள் 9 பேர் 24 நாட்களாக பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். முகாம்களில் வாழும் பெண்களை புணர்ச்சிக்கு அழைப்பது, அவர்கள் எதிர்க்கும்போது, உங்கள் அண்ணன், தம்பிகளை சிறப்பு முகாம்களில் அடைத்து விடுவோம் என்று மிரட்டுவது என்று கியூ பிரிவினரின் அராஜக நடவடிக்கைகள் இருக்கின்றன. இதுபோன்ற காரணத்தினால்தான் நாங்கள் கடலில் செத்தாலும் பரவாயில்லை என்று வேறு நாடுகளுக்கு தப்பி செல்கிறோம் என்று நம் சொந்தங்கள் கூறுவதை கேட்க வருத்தமாகவும், வெட்கமாகவும் இருக்கிறது.
அவ்வப்போது 4 பேர், 5 பேர் என்று விடுதலை செய்யப்படுகிறார்கள். அடுத்த சில நாட்களிலேயே மேலும் சில ஈழத்தமிழ் மக்களை, குறிப்பாக இளையோரை பிடித்துக் கொண்டு வந்து சிறப்பு முகாம்களில் அடைத்து விடுகின்றனர். எனவே தமிழக முதல்வர் மனிதாபிமான நோக்கோடு இதில் தலையிட்டு, செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அயல் நாட்டவர் சட்டத்தினை ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு எதிராக எப்படி கியூ பிரிவு தவறாக பயன்படுத்தி வருகிறது என்பதை சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி அறிந்துகொள்ள வேண்டும்.
முதல்வர், கியூ பிரிவினரின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது. இதற்கு விடிவு பிறக்க வில்லையெனில், கடுமையான ஒரு போராட்டத்தில் குதிப்பதைத் தவிர நாம் தமிழர் கட்சிக்கு வேறு வழியில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்."என்று அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.
சவுதியில் இலங்கைப் பணிப்பெண் சிரச்சேதம் செய்யப்பட்டது மரண தண்டனை குறித்தும் ஷரியா சட்ட நடைமுறைகள் குறித்தும் விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.
உலகளவில் குற்றவியல் தண்டனை முறைகளின் நோக்கம் பழி வாங்குதல், அச்சமூட்டி குற்றத்தை தடுத்தல் என்பதைத் தாண்டி – சீர்திருத்துதல், மறு வாய்ப்பளித்தல் என்பதை நோக்கி ஏற்கனவே நகர்ந்து விட்டது. ஆனால் சவுதி அரேபியாவோ ஷரியா என்பது எங்கள் அரசால்
""ஹலோ தலைவரே... தமிழர் திருநாள்- தமிழ்ப் புத்தாண்டு- பொங்கல் நன்னாள்னு முக்கனி சுவைபோல தித்திக்குது தை 1.''
""பவர்கட்டு, விலைவாசி, வறட்சி மூன்றும் மக்களை வாட்டுது. தை பிறந் தால் வழிபிறக்கும்னு சொல்லுவாங்க. இந்தத் தை கொஞ்சமாவது வலியைக் குறைச்சால் போதும்ங்கிறதுதான் மக்க ளோட எதிர்பார்ப்பு. தமிழ்நாட்டோட நிலைமையைக் காட்டு கிற மாதிரி, பொங் கல் நாளில் அரசு அலுவலகக் கட்டிடங்கள் எல்லாம் இருண்டு கிடக் குது. தி.மு.க. ஆட்சியில் தை 1 தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக எல்லா அலுவலகங்களும் ஜெகஜோதியா மின்னிக்கிட்டிருந்தது ஞாபகமிருக்கா?''
ஆண்டொன்றுக்கு இரண்டாயிரம் வழக்குகள் வரையில் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கு ஆளாகி விடுகின்றன. அதில் இரண்டாயிரத்து ஒன்றாக "நான்' இருக்கிறேன் என்பது போல இருக்கிறார் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ்...
-மெட்றாஸ் ஹைகோர்ட்டில் பிராக்டீஸ் செய்யும் மூத்த வழக்கறிஞர்களின் வேதனையான "கமெண்ட்'தான் இது.
போலீஸ் கமிஷனர் நேரில் ஆஜராகும்படி ஹைகோர்ட் சொன்னது எதனால்? அது என்ன வழக்கு? குறிப்பிட்ட அந்த வழக்கு பற்றி போலீஸ் வட்டாரத்திலும், கோர்ட் வட்டாரத்திலும்
யாழ். பல்கலை. மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரி இணையவழி மகஜர் கையெழுத்துப் போராட்டம்
அரச படைகளினால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடன் விடுதலை செய்யக்கோரி, இணையவழி மகஜர் கையெழுத்திடும் போராட்டத்தினை நடாத்த சமஉரிமை இயக்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய நாளைய தினம் இராஜகிரிய லயன்ஸ் கழகத்தில் இணையவழி மகஜர் கையெழுத்திடும் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)