-
14 ஜூலை, 2013
13 ஜூலை, 2013
தர்மபுரியில் நுழைய திருமாவளவனுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
இளவரசன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதனைக் கணக்கில் வைத்தும் சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் கணக்கில் கொண்டும் அனுமதி குறித்து மாவட்ட ஆட்சியரே முடிவு செய்யலாம் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தில் நுழைய திருமாவளவனுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தில் 144 தடை அமலில் உள்ளதால் திருமாவளவனுக்கு அனுமதி வழங்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இளவரசனின் உடல் அனைத்து கோணத்திலும் முழுமையாக ஆய்வு: எய்ம்ஸ் டாக்டர் குப்தா
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இளவரசனின் உடல் மறுபரிசோதனை செய்யப்பட்டது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மறுபரிசோதனை செய்தனர். எய்ம்ஸ் மருத்துவர்கள் பரத்வாஜ், கபிர்குமார், குப்தா, மேலோடெபின் ஆகியோர் ஆய்வு செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி மறுபரிசோதனைக்குப் பின்னர் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இளவரசனின் உடல் அனைத்து கோணத்திலும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது என்று டாக்டர் குப்தா தெரிவித்தார். மறுபரிசோதனை அறிக்கையை சீல் வைத்து உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
வெடிகுண்டு மிரட்டல்: சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு
சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளதாகவும், பெயர் குறிப்பிடாமல் எழுதப்பட்டுள்ள கடிதத்தில் துணைத் தூதரகம் தாக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்தாகவும், சென்னை காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இலங்கை துணைத் தூதரகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மிரட்டல் கடிதம் அனுப்பியது யார் என சென்னை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 ஜூலை, 2013
இன்று அதிகாலை கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற தனியார் மினி பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமுர்த்தி முகாமையாளர்கள் என மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உதவிப் பணிப்பாளர் பி.குணரட்னம் தெரிவித்தார்.
இளவரசனின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர்கள் யார்?
தர்மபுரி இளவரசனின் உடல் ஆய்வு அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவர் குழுவின் அடிப்படையில் இளவரசனின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது.கடந்த முறை பிரேத டாக்டர்கள் அல்லாமல் வேறு டாக்டர்கள் பரிசோதனை செய்வார்கள் என்றும், அந்த டாக்டர்கள் யார் என்றும் உயர்நீதிமன்றமே முடிவு செய்யும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)