புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2013




           ண்ருட்டியார் விலகலை அடுத்து, இருபத்தி நான்கே மணி நேரத்தில் அவசர அவசரமாக தே.மு.தி.க.வின் செயற்குழு கூட்டத்தை 12-ந் தேதி மாலையில் கூட்டினார் விஜயகாந்த். மா.செ.க்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அனைவரும், அன்று காலையே பரபரப்பாக சென்னைக்குப் படையெடுத்திருந்தனர்.
விசாரணை அதிகாரிகளின் வாக்குமூலம் உண்மை;நீதிவெல்லும் :
பேரறிவாளின் தாய் நம்பிக்கை பேச்சு 
 மரண தண்டைக்கு எதிரான வரலாற்று பதிவான உயிர்வலி (சக்கியடிக்கும் சத்தம்) என்ற ஆவணப்பட வெளியீட்டுவிழா நிகழ்ச்சி  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்இனஉணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மோதல்?- அதிர்ச்சியில் கட்சித் தலைமை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் மோதல்கள் வெடித்துள்ளதாக அரசாங்கத்தின் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

16 டிச., 2013

தி.மு.க. ஏற்கனவே எங்களை விட்டு வெளியேறி விட்டது: ஞானதேசிகன் பேட்டி
 
தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் சத்திய மூர்த்தி பவனில் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தி.மு.க. பொதுக்குழுவில் காங்கிரஸ் மீது இழிவுபடுத்தி உள்ளனர்.

அழைப்பின் பேரில் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார் வைகோ: ஒப்புக்கொள்வதில் என்ன தயக்கம்? தமிழருவி மணியன்
 

சென்னையில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் செய்தியாளர்களை திங்கள் கிழமை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 
இரண்டு திராவிட கட்சிகளின் முற்றுகையில்தான் தமிழகம்
சுவிசில் நடைபெற்ற அன்ரன் பாலசிங்கம் மற்றும் சு.ப.தமிழ்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் மற்றும் பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு கடந்த 14ம் திகதி சனிக்கிழமை செங்காலன் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
வடக்கு மாகாண சபையின் தீர்மானத்தை நிராகரித்தார் ஆளுநர் சந்திரசிறி
தன்னை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கக்கோரி, வடக்கு மாகாணசபை நிறைவேற்றிய தீர்மானத்தை மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி நிராகரித்துள்ளார்.தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நல்ல முறையிலேயே பணியாற்றி வருவதாகவும் அவர் கொழும்பு ஆங்கில

தாய் மற்றும் இரு பிள்ளைகள் சடலமாக மீட்பு

மாத்தறை- கந்தர பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து தாய் மற்றும் அவரது இரு பிள்ளைகளின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ஈழக்கனவை பெற்றுக்கொடுப்பதே யசூஷி போன்றோரது நோக்கம்: குணதாச

புலிகள் முப்பது வருடங்கள் ஆயுதப் போராட்டம் நடத்தி பெற்றுக்கொள்ள முடியாமல் போன தமிழீழ கனவை நிறைவேற்ற வேண்டுமென்ற முனைப்புடன் இன்று பலர் செயற்பட்டு வருகின்றனர். ஜப்பானின் விசேட சமாதான தூதுவர் யசூஷி அகாஷியின் செயற்பாடுகளும்

பொன் கலசமொன்றை 35 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்றவர்கள் கைது

கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற ஓய்வு பெற்ற இராணுவ லெப்டினல் கேர்ணலொருவரையும் பிறிதொரு நபரையும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கண்ணீர் மழையுடன் ஆபிரிக்க தந்தை நெல்சன் மண்டேலாவின் உடல் நல்லடக்கம்!
மறைந்த தென்னாபிரிக்க தந்தையும், முன்னாள் ஜனாதிபதியுமான நெல்சன் மண்டேலா உடல் இன்று அவரது சொந்த கிராமத்தில் அவரது வீட்டின் அருகே அரச மரியாதையோடு நல்லடக்கம் செய்யப்பட்டது.
புங்குடுதீவு மடத்துவெளி முருகன் ஆலயத்துக்கு அண்மையில் கடற்படையினாரல் கொல்லப்பட்ட இளையதம்பி தர்சினி நினைவு தினம் 

                                                       நினைவஞ்சலி 

                                அமரர் இளையதம்பி தர்சினி  
                                   மடத்துவெளி, புங்குடுதீவு 


8ம் ஆண்டு நினைவு நாள் 16-12-2013 வருடங்கள் பல சென்றாலும் நீங்கவில்லை உன் நினைவுகள் துடிக்கிறது எம் உள்ளம் உன் பெயா் ஒலிக்கும் போது ஒரு கணம் துடிக்க- மறுக்கிறது எம் இதயம் தமிழனாய் பிறந்தது நீ செய்த பாவம் உனைபிரிந்து தனிமையில் வாடுவதே நான் செய்த பாவம் மறு ஜென்மம் ஒன்றிருந்தாள் தோளில் சுமந்த உன்னை கருவில் சுமக்கும் வரம் கேட்பேன் அன்னாரின் ஆத்மா சந்தியடைய வயலுார் முருகனை பிரார்த்திப்போம்  - சிற்றம்பலம் எக்ஷனா 
பேரறிவாளன் உட்பட 14 பேரின் கருணை மனு மீது ஜனவரியில் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம்
பேரறிவாளன் உள்ளிட்ட 14 பேரின் கருணை மனுக்கள் மீதான விசாரணை முடிந்து விட்டதாகவும், அடுத்த மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் - பாஜகவுடன் கூட்டணி இல்லை: கலைஞர் திட்டவட்டம
 
 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் - பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார். 15.12.2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவு
பொருளாதாரத் தடையா? போர்க்குற்ற விசாரணையா?
ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த மார்ச் மாத அமர்வு குறித்து கலக்கத்தில் உள்ள அரசாங்கத்துக்கு, எதிர்க்கட்சிகளும் பேதியைக் கொடுக்கத் தொடங்கியுள்ளன.கடந்த வாரம், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஐ.தே.க. உறுப்பினர் சஜித் பிரேமதாஸ, இலங்கைக்கு
முல்லை. கடலில் பிதிர்கடன் நிறைவேற்ற சென்ற குடும்பஸ்தரை கடல்சுழி இழுத்துச் சென்றது
உறவினர் ஒருவரின் பிதிர்கடனை நிறைவேற்ற கடலுக்கு சென்ற குடும்பஸ்தர் கடலின் சுழியால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார்.
வடக்கில் விமானங்கள் பறக்க தடை விதிக்குமாறு ஐ.நா.விடம் தமிழ்க் கூட்டமைப்பு கோரவுள்ளது! சிங்கள இணையத்தளம் தகவல்
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைக் கூட்டத்தொடருக்கு முன்னதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியை பதவி நீக்கம் செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலைமை பரிதாபத்துக்குரியதாகவே உள்ளது!- ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலைமையும் பரிதாபத்துக்குரியதாகவே உள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளும் கிடைக்க எங்கள் வாழும் கலை இயக்கம் இயன்றதை செய்யும். இவ்வாறு  வாழும் கலை மையத்தின் நிறுவனரும் ஆன்மிகவாதியுமான
இன்று நடைபெற்ற தாய்மண் உள்ளரங்க உதை பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றதனால் யங் ஸ்டார் கழகம் தொடராக ஆறு தடவை வென்ற சாதனையை படைத்துள்ளது

இன்று நடைபெற்ற சுற்றுப் போட்டியில் இந்த  கழகம் எந்த அணியிடமும் தோற்காது மொத்தமாக 7 போட்டிகளில் பங்கு பற்றி 14 கோல்களை அடித்து 3 கோல்களை மட்டுமே வாங்கி அற்புதமாக விளையாடி தாய்மண் கிண்ணத்தை ஆறாவது தடவையாக தொடர்ந்து வென்று சாதனை படைத்துள்ளது .அரைக்கால் இறுதி, காலிறுதி ,அரையிறுதி, இறுதி

15 டிச., 2013

இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை:தயாராகிறது 
அமெரிக்கா! (சிறிலங்கா) இலங்கை அரசு தொடர்ந்தும் முரண்டுபிடிக்கும் வகையில் செயற்பட்டு வருவதால், அரசுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பான முனைப்புகளை அமெரிக்கா மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் இலங்கைக்கு எதிரான இந்த பொருளாதார தடைகளை ஏற்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நாடுகள் இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. இதனை விட இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை நடத்தாது தன்னிச்சையாக செயற்பட்டு வருவது குறித்தே சர்வதேச சமூகம் தற்பொழுது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. பொதுநலவாய நாடுகள் அமைப்பு போன்ற சர்வதேச அமைப்பின் தலைமை பதவியை பெற்றுக்கொண்ட பின்னரும் சர்வதேச நிலைப்பாடுகளுக்கு மதிப்பளித்து அதனை செயற்படுவதற்கு பதிலாக ஒருதலைப்பட்சமாக சர்வாதிகார ரீதியில் இலங்கை செயற்பட்டு வருவது அமெரிக்க ராஜதந்திரிகளை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. இது தொடர்பில் கடும் நடவடிக்கையாக அமெரிக்கா இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை விதித்து இலங்கை ஆட்சியாளர் உணரும்படியான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்ற யோசனையை காங்கிரஸ் சபையில் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்க காங்கிரஸின் மனித உரிமை தொடர்பான உப குழுவே இந்த யோசனையை கொண்டு வரவுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டிற்கு பின் இந்த யோசனை காங்கிரஸ் சபையில் முன்வைக்கப்பட உள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. அண்மைக் காலத்தில் உலகில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பான அதிகமான சாட்சியங்கள் இலங்கையில் இடம்பெற்ற போர் குறித்தே வெளியாகியுள்ளன. இவற்றில் உண்மை உள்ளதா இல்லையா என்பதை அறிய விசாரணைகளை நடத்தி கண்டறியும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது. விசாரணைகளை நடத்தாது தொடர்ந்தும் அதனை புறக்கணித்து வருவது ராஜதந்திரமான செயல் அல்ல எனவும் அமெரிக்க காங்கிரஸின் மனித உரிமை தொடர்பான உபகுழு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் உத்தேச பொருளாதார தடைவிதிப்பில் இலங்கை மக்களுக்கு தேவையான உணவு, மருந்து போன்றவற்றை தவிர வேறு விடயங்கள் உள்ளடக்கப்படலாம் என கருதப்படுகிறது. குறிப்பாக இலங்கையில் இருக்கும் வெளிநாட்டு வங்கி கணக்குகளை தடைசெய்தல், வெளிநாட்டவர் இலங்கை செல்லவும், இலங்கையர் வெளிநாடுகளுக்கு செல்லவும் வீசா வழங்குவதை இடைநிறுத்துதல் அல்லது கட்டுப்பாடுகளை விதித்தல், எரிப்பெருள் இறக்குமதி கட்டுப்பாடு, இலங்கையின் ஏற்றுமதிகளை கட்டுப்படுத்துதல் போன்றவை இந்த பொருளாதார தடையில் உள்ளடக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ad

ad