புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2014


காணாமல் போனோர் ஆணைக்குழுவிடம் 18600 முறைப்பாடுகள் - இரகசியமாக பான் கீ மூனைச் சந்தித்த சிறிலங்கா அமைச்சர்
இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற போரின் போது காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு 18,600

தமிழ்நாட்டின் எதிர்ப்புகளாலேயே நரேந்திர மோடி இலங்கை விஜயத்தை தவிர்த்தார்!- இந்திய ஊடகம்
தமிழ் நாட்டில் எதிர்ப்புகள் எழும் என்ற காரணத்தாலேயே இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆசியாவில் மிக வயதான பெண் 117 வயதில் இலங்கையில் உயிரிழப்பு
ஆசியாவிலேயே மிக வயதான பெண் என அழைக்கப்பட்ட முதியவர் தனது 117 ஆவது வயதில் நேற்று உயிரிழந்துள்ளார்.

6 ஜூன், 2014

இலங்கை குறித்த விசாரணைக்குழு 10 இல் அறிவிப்பு! 
 இலங்கை குறித்த விசாரணைக் குழுவினை எதிர்வரும் 10ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை பெயரிட உள்ளதாக சிங்கள ஊடகம்
கொன்சலிற்றா வழக்கு; யூலை 10 வரை ஒத்திவைப்பு 
news
கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெறோம் கொன்சலிற்றா தொடர்பான வழக்கு விசாரணையை யூலை 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தற்காப்புக்காகவே கொலை செய்தேன்;இலங்கைப் பெண் சாட்சியம் 
 குவைட்டில் பணியாற்றி வந்த இலங்கை பெண் ஒருவர் தம்மை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்த முற்பட்ட ஒருவரை தற்காப்புக்காக கொலை செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
புகைத்தல், மதுவுக்கு எதிராக சாவகச்சேரியில் பேரணி 
சர்வதேச மது மற்றும் புகைத்தல் எதிர்ப்பு தின விழிப்புணர்வுப் பேரணி இன்று காலை 9. 00 மணியளவில் சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு முன்பாக ஆரம்பமாகி சாவகச்சேரி நகர பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.
              கண்ணீர் அஞ்சலி 
புங்குடுதீவு மடத்துவெளி சனசமூக நிலையம் ,பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் என்பவற்றின் முன்னாள் தலைவர் 


சோமலிங்கம் சிவலிங்கம் 
(இளைப்பாறிய காவல்துறை அதிகாரி )
8 ம் வட்டாரம் ,புங்குடுதீவு .

புங்குடுதீவு 8 ஆம் வட்டாரத்தை சேர்ந்த முன்னாள் காவல் துறை அதிகாரியான சோமலிங்கம் சிவலிங்கம் அவர்கள் கடந்த  செவ்வாய் 03.06.2014 அன்று இறைவனடி சேர்ந்தார்  என்பதை ஆழ்ந்த கவலையுடன் தெரிவிக்கிறோம் . இறுதிக் கிரியைகள் புதனன்று சிறப்பாக நடைபெற்றது.
அமரர்  சிவலிங்கம் அவர்கள்  ஆசிரியர் இராஜசேகரம் ஆசிரியர் அவர்களின் தங்கையை மணந்து இறுதிக் காலம் வரை மடத்துவெளி மண்ணிலேயே  வாழ்ந்து பெருமை சேர்த்த ஒரு சமூக சேவையாளர் .அறுபதுகளின் இறுதியில் இருந்து இந்த கிராமத்தின் சமூக சேவையில் புரட்சி படைத்த மடத்துவெளி சனசமூக நிலையத்தின் இளையதலைமுறையினர் நாட்டுச்  சூழ்நிலை காரணமாக புலம்பெயர்ந்த போது அமரர் சிவலிங்கம் இந்த கிராமத்துக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாக வந்து சேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.அந்த இக்கட்டான காலத்தில் மடத்துவெளி சனசமூக நிலையம் ,ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் என்பவற்றை பலத்த சிரமங்களுக்கு மத்தியிலும் நிர்வகித்து மீண்டும்  இப்போதைய  மீள் எழுச்சி நிலை  வரை அத்தனை பொறுப்புக்களையும் தன் தோளில் சுமந்து  நின்ற பெருந்தகை . அன்னாரது சேவைகளை இந்த மண்ணின் வரலாறு தன்னிலே எழுதி செல்வோம் .அமரரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். துயருறும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் .
சுவிட்சர்லாந்து வாழ் மடத்துவெளி ஊரதீவு மக்கள் 







16வது மக்களவையின் புதிய சபாநாயகராக பொறுப்பேற்றார் சுமித்ரா மகாஜன்

16வது மக்களவையின் புதிய சபாநாயகராக வெள்ளிக்கிழமை முறைப்படி தேந்தெடுக்கப்பட்டார் சுமித்ரா மகாஜன். தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சபாநாயகராக பொறுப்பேற்றார்.  

வாடிக்கையாளருக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்க பூர்வீகா செல்போன் நிறுவனத்துக்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவு
திருப்பூர் மாவட்டம், உடுமலை, இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (39). தனியார் நிறுவன ஊழியரான இவர், கடந்தாண்டு ஜூலை 31-ஆம் தேதி உடுமலை,

பேரறிவாளன் கேட்டுகொண்டதற்காக அவருக்கு திடீர் மருத்துவ பரிசோதனை
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு திடீரென மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கிழக்கில் கொல்லப்பட்ட 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரிக்கை.பிரபாகரனி உத்தரவுக்கு அமைய பொ ட்டு அம்மான்  கொலை செய்தார் -கருணா 
தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்ட 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

5 ஜூன், 2014

இங்கிலாந்து அணியி்ல் புதுமுக வீரர்கள் மூவர் தெரிவு 
 இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்து அணி 12 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்துள்ளது.
இலங்கைக்கு அன்பளிப்பாக ரோந்து படகை வழங்கியது அவுஸ்திரேலியா 
அவுஸ்திரேலியா அரசாங்கத்தினால் மேலுமொரு ரோந்து படகு இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது
அவுஸ்திரேலிய வாழ் ஈழ அகதிகளிடம் தற்கொலை எண்ணம் அதிகரித்துள்ளது -அமைச்சர் ஸ்கொட் 
 அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு மனவள ஆலோசனை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.
யாழ்.மாவட்டத்தில் ஆதார வைத்தியசாலைகளாக இதுவரை நான்கு மட்டுமே தரமுயர்வு -செயலாளர் ரவீந்திரன் 
 யாழ்.மாவட்டத்தில் ஆதார வைத்தியசாலைகளாக நான்கு வைத்தியசாலைகளே இதுவரை தரமுயர்த்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்
உலகக் கோப்பை கால்பந்து போட்டியை வரவேற்கத் தயாராகும் பாலியல் தொழிலாளிகள் 
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள், எதிர் வரும் 12-ம் திகதி முதல் ஜூலை 13-ம் திகதி வரை தென் அமெரிக்க நாடான பிரேஸிலில் நடைபெறவுள்ள நிலையில் அந்நாட்டில்
டக்கு,கிழக்கில் தமிழ் அடையாளங்களை அழிக்கும் அரசு-முதலமைச்சர் சுட்டிக்காட்டு 
வடக்கு,கிழக்கு மாகாணங்களானவை எமது தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரிய இடங்கள். ஆனால் தற்போது அவற்றின் தொடர்புகளைக் கொச்சைப்படுத்த, அரசாங்கத்தினால்

ஆ.ராசா, தயாளு அம்மாள் உள்பட 10 பேர் ஜாமீன் மனு மீதான வக்கீல் வாதம் முடிந்தது
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக முன்னாள் தொலை தொடர்பு மந்திரி ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. கோர்ட்டில் இரு வழக்குகள்
இறுதி சடங்கை பார்க்கச் சென்று உயிரை விட்ட 7 பேர்
சீமாந்திரா மாநிலத்தில் இறுதி சடங்கை பார்க்க சென்ற 7 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

ad

ad