புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூன், 2014

தற்காப்புக்காகவே கொலை செய்தேன்;இலங்கைப் பெண் சாட்சியம் 
 குவைட்டில் பணியாற்றி வந்த இலங்கை பெண் ஒருவர் தம்மை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்த முற்பட்ட ஒருவரை தற்காப்புக்காக கொலை செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
குவைட்டின் ஹவாளி பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் வைத்து குறித்த பெண் எகிப்தை சேர்ந்த ஒருவரை கொலை செய்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
 
இதனைத் தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த எகிப்தியர் தம்மை பாலியல் 
துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்த வேளையில் தாம் அவரை தற்காப்புக்காக கொலை செய்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
 
எனினும் தாம் இதனை தற்செயலாகவே மேற்கொண்டதாகவும் அவரை தடுக்க முற்பட்ட வேளையில் இந்த கொலை இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் இது தொடர்பில் குவைட் காவற்துறையினர் வழக்கு பதிவு செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 

ad

ad