புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2014


தமிழ்நாட்டின் எதிர்ப்புகளாலேயே நரேந்திர மோடி இலங்கை விஜயத்தை தவிர்த்தார்!- இந்திய ஊடகம்
தமிழ் நாட்டில் எதிர்ப்புகள் எழும் என்ற காரணத்தாலேயே இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாடுகள் வலுப்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டால், தேவையற்ற விமர்சனங்களும், ஆர்ப்பாட்டங்களும் எழும்.
இதனைக் கருத்தில் கொண்டே அவர் இலங்கைக்கான விஜயம் குறித்த திட்டங்களை பிற்போட்டுள்ளதாக குறித்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

ad

ad