புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஆக., 2019

தமிழக பெண்களிடம் கமல்ஹாசனுக்கு அரசியல் மரியாதை சுத்தமாக இல்லை

மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் கமலஹசனுக்கு பெண்கள் மத்தியில் மரியாதை சுத்தமாக இல்லையென அரசியல் கட்சிகளின் வெற்றிகளுக்காக ஆய்வு செய்து தேர்தல்களில் வெற்றிவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் நிறுவனமான ஐபேக்நிறுவன தலைவர் பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார் என தமிகழ செய்திகள் தெரிவிக்கின்றது.
கனடா மாகோ சின்னத்தம்பி சின்னத்தங்கம் அறக்கட்டளை நிறுவனம் புங்குடுதீவு  வைத்தியசாலை   தேவைகளுக்கென  12   லட்ஷத்து 23 ஆயிரத்து  முந்நூற்று   24 ரூபங்களை  வழங்கி  சிறப்பித்துள்ளது  இது போன்ற தொண்டு பணிகளை நாமும் மனமார வாழ்த்துவோம் வரவேற்போம் வாருங்கள் உறவுகளே 
பதிவு இணையத்தின் அறிவிலித்தனம் -  தீவகபிரதேசசபைகள் கூட்டமைப்பு வசமா?  இன்று பதிவு இணையம்  நெவிக்கு  தண்ணீருண்டு   தமிழனுக்கு இல்லையாம் என்ற தலைப்பில்  கூட்டமைப்பின் வசமுள்ள  தீவக பிரதேச சபைகள்  நெவிக்கு  தண்ணீர்  கொடுக்கிறார்களாம்  தமிழனுக்கு  கொடுக்கவில்லையாம் என்று  உளறி கொட்டி இருக்கிறது  .எந்த செய்தியை  எடுத்தாவது  கூட்டமைப்பை  அங்கே   கொண்டு  போய்  முடிச்சு போட்டு  பழகிய  எண்ணத்தில்  இங்கேயும் அறிவிலித்தனமாக  எழுதி உள்ளது வேலணை பிரதேச சபை புங்குடுதீவு  தண்ணீர்  விநியோக பிரச்சினையில் தான்  இப்படி  மூக்கை நுழைந்துள்ளது  வேலணை பிரெஹ்ச சபை  நியாயமாக  கூட்டமைப்புக்கு  கிடைக்க வேண்டிய  நிலையில்  ஈ பி டி  பி க்கு  நேரடியாகவும் மறைமுகமாகவும்  ஆதரவு வழங்கிய ஒரு  இலக்கம் இரண்டு இலக்கத்தில் சொதப்ப  வாங்கினாலும் மொத்தமாக  கூட்டி  கட்டி  நியமன   உறுப்பினராகிய  உதிரிக்கடசி கள்  கோத்தா   கட்சிகள் மொட்டு கட்சிகளிடம்  போய் கேட்க முடியுமா இல்லை அவர்களை பற்றி  எழுத முடியுமா 

வேலூர் தேர்தல்; இஸ்லாமிய அமைப்பினருடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்திய மண்டபத்திற்கு சீல்

வேலூர் தேர்தல் பற்றி ஆம்பூரில் அனுமதியின்றி இஸ்லாமிய அமைப்பினருடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்திய மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய முடியாத நிலையில் ஐதேக

ஜனாதிபதி தேர்தலுக்கு பொது வேட்பாளர் ஒருவரை தெரிவுசெய்ய முடியாத சூழ்நிலைக்கு ஐக்கிய தேசிய கட்சி தள்ளபட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்

கரு ஜயசூரிய களமிறங்க ரணில் பச்சைக்கொடி?

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற சர்ச்சை ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முட்டிமோதுகையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையைத் தானே முன்னின்று ஒழிப்பார் என்ற உறுதிப்பாட்டுடன் அந்தப் பணிக்கான பொது வேட்பாளராகத் தற்போதைய சபாநாயகர்

பெரும்தோட்ட தமிழ் இளைஞர்களும் ஆயுதம் தூக்கிப் போராட வேண்டுமா?

பெரும்தோட்ட தமிழ் இளைஞர்களும் ஆயுதம் தூக்கிப் போராட வேண்டுமஅவசரகால சட்டத்தை பயன்படுத்தி பொலிஸார் பெரும்தோட்ட தமிழ் இளைஞர்களுடன் தேவையில்லாமல் உரசிப்பார்த்து வருகின்றனர். அதனால் அவர்களையும் ஆயுதம் தூக்க வைக்கக்கூடாது என இராஜாங்க

31 ஜூலை, 2019

இரட்டைக்கொலை - தடயப் பொருட்களுடன் கொலையாளி கைது

கிளிநொச்சி- ஜெயந்திநகர் பகுதியில் நேற்று இடம்பெற்ற இரட்டைக் கொலைகளின் சூத்திரதாரி என்ற சந்தேகத்தின் பெயரில் அயல் வீட்டுக் காரர் கைது செய்யப்பட்டுள்ளார் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, தாமே கொலைகளை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்

செப்ரெம்பர் முதல் பலாலி-சென்னை விமானசேவை

பலாலி விமான நிலையம் இந்திய துணைக்கண்டத்தின் பிராந்திய விமான நிலையமாக செப்டெம்பர் மாதம் முதல் செயற்படவிருப்பதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேயசிங்க தெரிவித்துள்ளார்.
பலாலி விமான நிலையம் இந்திய

மொட்டு'டன் இணையும் ஐதேக முக்கியபுள்ளி

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபல அரசியல்வாதி உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலர், எதிர்வரும் 11ஆம் திகதிக்கு பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்வார்கள் என, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியப் பெண்கள் அணியும் புர்காவுக்கு நிரந்தரத் தடை

இஸ்லாமியப் பெண்கள் அணியும் புர்கா ஆடைகளை நிரந்தரமாக தடை செய்யக் கோரும் அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள இதற்கான பத்திரத்தைக் கையளித்துள்ள நிலையில், அடுத்த கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும்

30 ஜூலை, 2019

கப்பலோட்டிகளாக கடற்புலிகள்!! -நியமிக்க கோருகிறார் சிறிதரன் எம்.பி

யாழ்.மாவட்டத்தின் தீவகப் பகுதிகளுக்கான சேவையில் ஈடுபடும் கப்பல்களின் சாரதிகளுக்கான வெற்றிடத்திற்கு கடற்புலிகளின் இருந்தவர்களை பயன்படுத்துமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அமெரிக்க தடை தாண்டி ஹுவாய் திறன்பேசியின் வருவாய் 23.2% அதிகரிப்பு

சீனாவின் தயாரிப்பான ஹுவாய் திறன்பேசியின் வருவாய் 23.2% அதிகரித்துள்ளது.
நேற்று செவ்வாய்கிழமை ஹுவாய் திறன்பேசியின் முதல் அரையாண்டு வருவாய் குறித்து என்றும் மே மாதத்தில் வருவாய் மிக வேகமாக வளர்ந்தது" என்றும் ஹவாய் தலைவர் லியாங் ஹுவா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

நவீன் திசாநாயக்கவுடன் வாக்குவாதம்; வெளியேறினார் திகாம்பரம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 50 ரூபா வேதன அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தனது அமைச்சிலிருந்து நிதி வழங்க முடியாது என்றும் அமைச்சர் பழனி திகாம்பரம் தன்னுடைய நிதியிலிருந்து வழங்குமாறு கூறியதையடுத்து,

தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வாக யாழில் அமைகிறது நீர் தேக்கம்... யாருக்கு?- நேரு குணரட்ணம்

தண்ணீர் பற்றாக்குறையால் அதிகம் அவதிப்படுபவர்கள் இலங்கைத்தீவில் தமிழர்கள் என்றால் அது மிகையில்லை. அது அன்றாட தேவைகளைக் கடந்து விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு எனப் பல துறைகள் சார்ந்தும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது,

நீட்டி முழங்கிய வைகோ; கேரள எம்பிக்கள் ஆதரவ

மேற்குத் தொடர்ச்சி மலையை உடைத்து நொறுக்கும்நி யூட்ரினோ திட்டத்தை நிறுத்துங்கள் என மதிமுக பொதுச்செயலாளர் நீட்டி முழங்கியுள்ளார், வைகோவின் கருத்தை ஆமோதிப்பதாக கேரள எம்பிக்களும் கூறியுள்ளனர்
அப்பா  ஸ்தானத்தில் மதிப்பு கொடுக்கும்  தர்சனுக்கும்  லூசியாவுக்கும் சேரன்  வைத்த  முதல்  ஆப்பு 
பிக் போஸ் நிகழ்ச்சியில்  முதல்  வார வெளியேற்றும் படலத்தில்  வேட்ப்பாளராக்க தர்சனை யும்  லூசியாவையும்  நீக்க  வாக்கு   கொடுத்தவர் தான் சேரன் . அதன் பின்  தர்சனை  யாரும்  இதுவரை   வெளியேற்ற  வாக்களிக்கவில்லை  லூசியாவை கூட இந்த வாரம் தான்  ஒரு வாக்கு  பெற்றுள்ளார் இருந்தாலும் பட்டியலில் இடம்பெறவில்லை  சேரன்  இவர்களை  நீக்க  விருப்பம்  டெஹ்ரிவித்தது கூட  டர்ஹெறியாமல் இன்னும்  சேரனை  அப்பா  ஸ்தானத்தில்  வைத்து  மதிப்பு கொடுத்து  வருகிறார்கள்  அவர்களுக்கே  தெரியாத  நிலை  தானே  சேரனின் செயகை   வெளியே  வந்து  திரும்ப  அந்த நிகழ்ச்சியை பார்த்தால் மட்டுமே  தெரியவரும்

ஊடகங்களில் உலாவும் கோத்தாவின் போலி ஆவணம்

அமெரிக்க பிரஜாவுரிமையை துறந்து விட்டார் என தெரிவிக்கும் விதத்தில் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஆவணம் போலியானது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள கோத்தபாய ராஜபக்ச உரிய ஆவணம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பிரஜாவுரிமையை துறந்து

பிள்ளையாரை ஆக்கிரமித்த பிக்குவுக்கு மனநோய்

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை அடாத்தாக சுவீகரித்து அங்கு பாரிய புத்தர் சிலையொன்றை நிறுவி - பௌத்த விகாரையை அமைத்து குடிகொண்டிருக்கும் கொலம்ப மேதாலங்க தேரர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பாலியல் துன்புறுத்தல் - அதிபர், ஆசிரியர்கள் விடுதலை

மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை மூடி மறைத்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட யாழ்ப்பாணத்தை அண்மித்த பகுதியின் பாடசாலை ஒன்றின் அதிபர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் மூன்று ஆண்டுகளின் பின்னர் குற்றமற்றவர்கள் என யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் இன்று விடுவிக்கப்பட்டனர்.

ad

ad