புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஆக., 2012


கலைஞரிடம் பேசிக்கொள்ளுங்கள்! இலங்கை தூதருக்கு ராம்விலாஸ் பாஸ்வான் பதிலடி!
டெசோ மாநாட்டில் தான் பங்கேற்பதை தடுக்க டெல்லியில் உள்ள இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் முயற்சித்ததாக கூறிய ராம்விலாஸ்பாஸ்வான், எதுவாக இருந்தாலும் கலைஞரிடம் பேசிக்கொள்ளுங்கள் என்று பதில் அளித்துவிட்டதாக தெரிவித்தார். 

திமுக தலைவர் கலைஞர் தலைமையில் டெசோ அமைப்பின், ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 12.08.2012 அன்று நடைபெறுகிறது.
டெசோ மாநாட்டில் பங்கேற்கும் லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறயிருக்கும் டெசோ மாநாடு எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் இலங்கைத் தூதர் என்னை வந்து சந்தித்தார். அவர் என்னை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், நான் அவரிடம் கூறினேன், தமிழக மக்களை நீங்கள் நேரில் சந்தியுங்கள். இலங்கை அரசு மற்றும் ராஜபச்சே பற்றிய அவர்களின் கருத்துக்களை அறியுங்கள். மேலும், திமுக தலைவர் கலைஞரையும் சந்தியுங்கள் என்று எனது கருத்தை உறுதியாக கூறிவிட்டேன் என்றார்.

ad

ad