புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஆக., 2012


பிள்ளையான் கட்சியின் இணைப்புச் செயலாளர் செல்வேந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைவு
கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்பு செயலாளராகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நிருவாகச் செயலாளராகவும் பணிபுரிந்த திரு.அ.செல்வேந்திரன் தமிழரசுக் கட்சியின் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்துகொண்டார்.
நேற்றைய தினம் அக்கரைப்பற்று கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான கூட்டத்திலேயே திரு செல்வேந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்துகொண்டு உரையாற்றினார்.
அவர் இங்கு உரையாற்றுகையில்,
தான் ஆரம்பகால தமிழரசுக் கட்சித் தொண்டன் எனவும் கடந்தமுறை தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடாததால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இணைந்து செயற்பட்டதாகவும் தெரிவித்த அவர், தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் போட்டியிடுவதால் தனது முழுமையான ஆதரவும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே என கூறினார்.
அத்துடன் தமிழ் மக்களுக்கு வேண்டியது வெறும் அபிவிருத்தி மட்டுமல்ல எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் நாட்டை அபிவிருத்தி செய்வது அவர்களின் கடமையாகும்.
எனவே தமிழ் மக்கள் தங்களது உரிமையை வென்றெடுப்பதற்கு நடைபெற இருக்கின்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து கூட்டமைப்பினை பலப்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இக்கூட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராசா மட் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் மற்றும் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களான தமிழ்நேசன், கென்றி மகேந்திரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

ad

ad