புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஆக., 2012

எஞ்சியுள்ள புலிகளால் இலங்கைக்கு ஆபத்து அச்சப்படுகிறார் கோத்தபாய

விடுதலைப் புலிகளின் எச்சங்கள் இன்னுமிருக்கின்றன என் பதை நாம் அறிவோம். எஞ்சியுள்ள இந்தச் சக்திகள் இன்னும் இலங்கைக்கு வெளியே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.


இலங்கைக்கு உள்ளும் மற்றும் வெளியிலும் சிலர் உள்ளனர். ஒட்டுமொத்தமாக உள்ளும் புறமும் உள்ள இந்தச் சக்திகள் அமைதியையும், ஸ்திரப்பாட்டையும் சீர்குலைக்க எத்தனிக்கலாம். அதனால் பாதுகாப்புப் படைகள் விழிப்பாக இருக்கவேண்டும்.
 
இவ்வாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ திருகோணமலையில் வைத்து எச்சரிக்கை விடுத்தார். இலங்கை விமானப் படையின் "கடேற்' அதிகாரிகள் 83 பேருக்குப் பதவியுயர்வு வழங்கும் வைபவம் திருகோணமலை சீனன்குடா விமானப்படைத்தளத்தில் நடைபெற்றது. 
 
இவ்வைபவத்திற்குத் தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே அவர் பாதுகாப்புப் படையினரை இவ்வாறு கோரியுள்ளார்.
 
அவர் தொடர்ந்து பேசுகையில், 
"30 வருடகால நீண்ட போர் முடிவுக்கு வந்துள்ளது. எனினும், நாட்டின் பாதுகாப்பும், ஸ்திரப்பாடும் தொடர்ந்தும் உத்தரவாதப்படுத் தப்பட வேண்டும். இது அனைத்து இராணுவ அதிகாரிகளினதும் தலையாய கடமையாகும்'' எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
"இந்தச் சக்திகளின் மிரட்டல்கள் குறித்து எம்மால் அசமந்தமாக இருந்துவிட முடியாது. நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். இது மிக மிக அவசியமாகும். 
 
சமாதானமும், ஸ்திரப்பாடும் நீடிப்பதை நாம் உத்தரவாதப்படுத்தவேண்டும். இதன் மூலம் அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தை எம்மால் கட்டியெழுப்ப முடியும்'' என்றும் கோட்டாபய நம்பிக்கை தெரிவித்தார். 
 
"போருக்குப் பின்னர் ஆயுதப்படைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் பொறுப்புகள் வழமைக்கு அதிகமானவையாகக் கூட இருக்கலாம். போர் முடிவுற்று அதிக காலம் சென்றுவிடவில்லை. போர்முனையில் முனைப்போடு செயற்பட்ட சில அதிகாரிகள் உலகின் பல்வேறு நாடுகளில் தூதுவர்களாகவும், துணைத்தூதுவர்களாகவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டு பெரிதும் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
"அநேக அதிகாரிகள் அதிமுக்கியமான தூதரகங்களில் பாதுகாப்பு அத்தாட்சிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் பல்வேறு தகைமைகளைக்கொண்டவர்கள். இவற்றில் இவர்கள் தமது படைகளுக்குக் கொண்டுவந்த பேரும், புகழும் அடங்கும். இப்படைகள் தங்கள் நாட்டுக்கு அளப்பரிய சேவைகளை ஆற்றியுள்ளன. இது போன்று நாட்டுக்கு மேலும் சேவைபுரிய தமது தொழிலையும், அர்ப்பணிப்பையும் தக்கவகையில் இதர பல வழிகளிலும் பயன்படுத்த இவர்களுக்கு அரிய வாய்ப்புண்டு'' என்றும் அவர் தெரிவித்துக்கொண்டார். 
 
"புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ தாமரைத் தடாகக் கலையரங்கு நிர்வாகப் பீடத்திலும் முப்படைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் உள்ளனர். இராணுவ அதிகாரிகளின் கலைத்துறை ஆர்வம், திறமை ஆகியவை குறித்து சில கலைத்துறைப் பிரிவுகள் சந்தேகப்படலாம். ஆனால், இவர்கள் ஆற்றிய சேவைகளை எவராலும் எளிதில் மட்டிட முடியாதென்பதை நாம் அறிவோம்'' என்றும் குறிப்பிட்டுள்ளார். 

ad

ad