புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2013

பாரிஸ் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை சதுக்கத்தில் நாளை முற்றுகைப் போராட்டம்.
ஐ.நா செயலகத்தின் முன் தீயிட்டு வீரமரணமடைந்த முருகதாசன் நினைவு நாள் 12/02/2013யில் சென்னையில் ஐ.நா அலுவலக முற்றுகைப் போராட்டம். ஐ.நா செயலகத்தின் முன் தீயிட்டு வீரமரணமடைந்த முருகதாசன் நினைவு நாள் 12/02/2013யில் சென்னையில்
ஐ.நா அலுவலக முற்றுகைப் போராட்டம். அதே வேளை பிரான்சு பாரிஸ் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை சதுக்கத்தில் நாளை முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது.
முத்துக்குமார் முருகதாசன் மற்றும் தமிழுக்காக, தமிழ் மக்களின் விடுதலைக்காக, தமிழீழ மக்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்பதற்காக தமிழரின் எழுச்சிக்காக தங்களை வேள்வி தீயாக்கிய செங்கொடி மற்றும் அணைத்து தியாக உள்ளங்களை நினைவு கொண்டு- முற்றுகை இடுவோம்.
பொதுமக்களை காக்கும் சர்வதேச விதிமுறைகளை இலங்கைக்காக உடைத்தெறிந்த ஐ.நா அதிகாரிகள் பான்-கி-மூன், விஜய் நம்பியார், ஜான் ஹோல்ம்ஸ் ஆகியோரை விசாரி. தமிழீழ விடுதலையை தடுப்பதற்காக இவர்கள் நிறுத்தி வைத்துள்ள ஐ.நா பொது வாக்கெடுப்பினை உடனே நடத்து.
மேற்குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு எதிராக பல நூறு ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றுள் சில,
போரில் சிக்கிய தமிழர்களுக்கு உணவும், மருந்தும் அனுப்புவதை ஐ.நா நிறுத்தியது. உணவையும், மருந்துகளையும் தடை செய்வது போர் குற்றம். (இறுதியாக அனுப்பிய உதவி பொருட்களில் உணவு- மருந்துக்கு பதிலாக கிரிக்கெட் மட்டைகள், பந்துகளை ஐ.நாஅனுப்பியது).
இலங்கை அரசால் கொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையை வெளியிட மறுத்ததன் மூலம் போரை தொடர்ந்து நடத்த அனுமதித்தது.(இன்றுவரை இந்த எண்ணிக்கையை வெளியிடவில்லை).
இலங்கை அரசு செய்த போர்குற்றங்கள், படுகொலை குற்றச்சாட்டுகளை புலிகளின் மீது சுமத்தச் சொல்லி கீழ்மட்ட அதிகாரிகளை ஐ.நா நெருக்கியது. போர்முனைக்கு சென்று நடக்க இருக்கும் இனப்படுகொலையை தடுக்க அனுப்பப்பட்ட விஜய் நம்பியார் கொழும்பு விடுதியை விட்டு வெளியே வராமல் ஓய்வு எடுத்தது.
இனப்படுகொலையை முடித்ததை வெற்றிவிழாவாக கொண்டாடிய இலங்கை அரசு விழாவில் பான்-கி-மூன் பங்கெடுத்து சிங்களர்களை வாழ்த்தியது. சனல்4 காணொளியை ஐ.நாவின் உயர் அதிகாரிகளுக்கு காண்பிக்க மறுத்து, இலங்கை அரசு தயாரித்த விளம்பர காணொளியை பான்- கி-மூன் காட்டியது.
சர்வதேச விசாரணை வேண்டும் என ஐ.நா அதிகாரிகள் சொன்னதை மறுத்து “இலங்கையே தன்னை விசாரித்துக் கொள்ளட்டும்” என்று பான்-கி-மூன் சொன்னது.
தமிழர்களை கொன்ற இந்திய அமைதிகாப்பு படையில் வேலை செய்த “சித்தார்த்” என்பவரே பான்-கி-மூனின் மருமகன். இனப்படுகொலை போரின் அலோசகர் சதீஸ் நம்பியாரே, இனப்படுகொலையை தடுக்கும் பொறுப்பினை ஏற்ற விஜய் நம்பியாரின் உடன் பிறந்த அண்ணன்.
இனப்படுகொலை ஆதாரங்களை அழிக்க பான்-கி-மூன் இலங்கைக்கு கால அவகாசம் அளித்தது, என பல நூறு ஆதாரங்கள் வெளியாகியுள்ளது.
“தமிழர்களை இலங்கை அரசு நன்றாக காப்பதாக” தற்போது கூறி வரும் ஐ.நாவின் உயர் அதிகாரிகளை அம்பலப்படுத்தவும், 18 தமிழர்கள் தீயிட்டு தியாகம் செய்தும் தடுத்து நிறுத்த முடியாத இனப்படுகொலை போரின் பின்னனியில் ஐ. நாவும், இந்திய அரசும் வேலை செய்ததை கண்டிக்கவும், தமிழீழ விடுதலையை அறிவிக்க கோரியும் தவறாது கூடுவோம்.
2009யில் நாம் தடுக்க தவறிய இனப்படுகொலைக்கு இன்றாவது நியாயம் கேட்க ஒன்று திரள்வோம். தமிழர்களுக்கு துரோகம் செய்த ஐ.நாவின் அதிகாரிகளுக்கும் இந்திய அரசுக்கும் எதிரான தொடர் போராட்டத்திற்கு தயாராவோம். கொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்கு நியாயம் கேட்க இனியாவது ஒன்றாவோம். நீதி கேட்டு வீதிக்கு வருவோம். 
தமிழின இயக்கங்களே, தமிழர்களே கைகோர்ப்போம்.  2009யில் செய்யாததை செய்து முடிப்போம் வாருங்கள்.
இடம்: மனிதவுரிமை சதுக்கம், (Metro: Trocadero Ligne: 6/9)
காலம்: செவ்வாய் 12-02-2013 மாலை 3 மணிக்கு (15h00)
தொடர்பு: mte.france@gmail.com / 06 52 72 58 67

ad

ad