புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2013

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவராக பதவி வகித்துவரும் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸை சவூதி அரேபிய அரசு மீள அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய மூதூரை சேர்ந்த ரிசான நபீகிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சவூதி அரேபியாவிற்கான
இலங்கை தூதுவராக கடமையாற்றிய அஹமட் ஜவாத் இலங்கை அரசாங்கத்தினால் திருப்பி அழைக்கப்பட்டார். எனினும் பதவிக்காலம் முடிவடைந்ததனாலேயே தான் திருப்பி அழைக்கப்பட்டதாக ஜவாத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே ஜவாத் திருப்பி அழைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸ் திருப்பியழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் மேற்படி சம்பவத்திற்கான காரணம் என்ன என்பதை தூதுவராலயமோ அந் நாட்டு அரசோ இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ad

ad