புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 அக்., 2013

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன்

10 அணிகள் இடையிலான 5–வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா கடந்த 21–ந்தேதி தொடங்கியது. லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் இந்தியாவைச் சேர்ந்த மும்பை இந்தியன்சும், ராஜஸ்தான் ராயல்சும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.இந்த நிலையில்
மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் ‘இறுதியுத்தம்’ இவ்விரு அணிகள் இடையே டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்றிரவு நடந்தது.
இதில், டாஸ் ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ராகுல் டிராவிட் முதலில் மும்பை அணியை பேட் செய்ய அழைத்தார். இதன்படி முதலில் பேட் செய்த மும்பை அணி  20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. கடைசி 10 ஓவர்களில் மட்டும் அந்த அணி 142 ரன்களை சேகரித்தது. பின்னர் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி, 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதன் மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

ad

ad