புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 அக்., 2013

நீலாங்கரையில் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த 3 வாலிபர்கள் கைது

நீலாங்கரையில் பூட்டிய வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். படுக்கை அறையில் இருந்த தானியங்கி கதவை திறக்க முடியாததால் அவர்கள் சிக்கினர்.

பூட்டிய வீட்டுக்குள் ஆட்கள் நடமாட்டம்
சென்னையை அடுத்த நீலாங்கரை புளூ பீச் சாலையில் வசிப்பவர் டாக்டர் அப்துல்லா. இவர் குடும்பத்துடன் கடந்த 25–ந்தேதி ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றி பார்க்க சென்றார். பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டின் முன்பக்க ஜன்னல் கண்ணாடி உடைந்து இருந்தது. கதவை திறந்து வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது முன்அறையில் துணிகள் சிதறி கிடந்தன. உணவு அறையில் பிரியாணி பொட்டலங்கள் சாப்பிட்டு அப்படியே கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்துல்லா படுக்கை அறைக்கு சென்று பார்த்தார். அங்கு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அறையின் உள்ளே ஆட்கள் பேசும் சத்தம் கேட்டது.
இளம்பெண் உள்பட 4 பேர் பிடிபட்டனர்
இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர், வீட்டிற்குள் கொள்ளையர்கள் புகுந்து இருக்கிறார்கள் என்று நினைத்து குடும்பத்துடன் வெளியே ஓடி வந்தார். இதுகுறித்து நீலாங்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே அடையாறு துணை கமிஷனர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் உமாசங்கர், நீலாங்கரை இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் துப்பாக்கியுடன் விரைந்தனர்.
வீட்டிற்குள் நுழைந்த போலீசார், அப்துல்லாவிடம் இருந்த சாவியை கொண்டு படுக்கை அறையை திறந்தனர். அப்போது அங்கு ஒரு இளம்பெண்ணும், 3 வாலிபர்களும் இருந்தனர். 4 பேரையும் கையும்களவுமாக பிடித்த போலீசார் அவர்களை நீலாங்கரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
விசாரணையில், நீலாங்கரையைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 20), விஜய்(20), ராஜா(21) என்பதும், கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் என்பதும் தெரியவந்தது.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது போலீசாரிடம் அவர்கள் கூறியதாவது:–
உல்லாசம்
கிழக்கு கடற்கரை சாலையில் பூட்டிக் கிடக்கும் பங்களா, பண்ணை வீடுகளை நோட்டமிடுவோம். பூட்டி இருக்கும் வீடுகளை கள்ளச்சாவி மூலம் திறந்து அந்த வீடுகளில் உள்ள பொருட்களை கொண்டு சமைத்து சாப்பிடுவோம். அங்கேயே உல்லாசமாக இருப்போம். தேவைப்பட்டால் பணத்தை எடுத்து ஜாலியாக இருப்போம். நகைகளை கொள்ளையடிக்க மாட்டோம்.
இதேபோல் ஜாலியாக இருக்கவே இந்த வீட்டிற்கு வந்தோம். ஆனால் தானியங்கி கதவாக இருந்ததால் கதவு பூட்டிக் கொண்டது. இதனால் நாங்கள் மாட்டிக்கொண்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்கள்.
இவர்கள் சொல்வது உண்மைதானா? இவர்களுக்கும் கொள்ளை கும்பலுக்கு ஏதாவது தொடர்பு இருக்கிறதா? தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ad

ad