முருகன், பேரறிவாளன்,சாந்தன் - நாளை பரபரப்பு தீர்ப்பு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன்,சாந்தன் உட்பட 7 பேரின் விடுதலை தொடர்பான மனு மீது நாளை தீர்ப்பு கூறப்படுகிறது.உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது. தமிழக அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு செய்தது மத்திய அரசு. இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்து நாளை தீர்ப்பு கூறப்படுகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் இந்த தீர்ப்பை வழங்குகிறார்.