ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்ட எஸ்.தவராசா மாகாண சபை உறுப்பினராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற இந்த வைபவத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த மற்றும்
வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகியோரும் கலந்து கொண்டனர்.