புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மே, 2014

13ம் திருத்தச் சட்டம் தமிழ் மக்களுக்குத் தீர்வாக அமையாது - மாவை
13ம் திருத்தச் சட்டம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக அமையாது என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் பொது செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டம் மாகாண சபைகளுக்குஅதிகாரங்களை வழங்கும் விடயம் மாத்திரமே.
ஆனால் இதனையும் இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுலாக்க மறுத்து வருகிறது. எவ்வாறாயினும் இந்தியாவும் இலங்கை அரசாங்கமும் 13ம் திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று, அதிகாரப் பகிர்வினையும், தீர்வினையும் வழங்குவதாக இணங்கிக் கொண்டிருந்தன.
இந்த இணக்கப்பாடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இந்தவிடயத்தை இந்தியாவில் புதிதாக ஆட்சி ஏறும் அரசாங்கத்துக்கு தெளிவுப் படுத்துமாறு, தாம் தங்களை சந்தித்த இந்திய பிரதிநிதிகளிடம் தெளிவாக கூறி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad