துரையப்பாவிளையாட்டரங்கில் யாழ்.வலயமட்ட மெய்வல்லுநர் போட்டிகள்
யாழ்.வலயத்தில் உள்ள பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டி கடந்த 9 ம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இதன்படி கடந்த 9 ம் திகதி யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் முதல்நாள் போட்டி இடம்பெற்;றுள்ளதுடன் 2 ம்,3ம் நாள் போட்டிகள் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்றும் இன்றும் இடம்பெற்று வருகின்றது.
இதில் பாடசாலை மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான வலயமட்டத் தெரிவாக இப் போட்டிகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.