தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வினில் பங்கேற்க கொளத்தூர் மணி அவர்கள் சுவிஸ் வந்தடைந்தார்
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆரம்பகாலம் தொட்டு இன்று வரை துணைநிற்ப்பவரும் திராவிட விடுதலைக் கழகத்தின் தலைவருமான திரு. கொளத்தூர்மணி அவர்களும் அவருடன் தமிழீழ உணர்வாளருமான திலீபன் அவர்களும் நடைபெறப்போகின்ற தேசிய மாவீரர்நாள் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நேற்று நண்பகல் 13.00 மணி அளவில் சுவிஸ் சூரிச்விமான நிலையத்தை வந்தடைந்தனர்.நன்றி பதிவு
திரு.கொளத்தூர் மணி அண்ணா அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதப்போராட்டமாக பரிணாமித்தபோது தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முதலாவது பயிற்சித்தளத்தை ஆரம்பிப்பதற்காக தனது பண்னை நிலத்தை வழங்கிய ஈழ உணர்வாளர் என்பது குறிப்பிடத்தக்கது .
சுவிஸ்தமிழர்ஒருங்கிணைப்புக்குழு.