தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களது அரசியற் பெருவிருப்பின் சனநாயக வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது தவணைக்காலத்தின் மூன்றாவது
நேரடி அரசவை ஜேர்மனியின் டோட்முண்ட் நகரில் தொடங்கியது.
மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளின் உணர்வுகளை தாங்கியவாறு மே 22,23,24ம் ஆகிய மூன்று நாட்கள் அமர்வாக இந்த அமர்வு இடம்பெறுகின்றது.
புலம்பெயர் தேங்களில் இருந்தும் நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்கள், மேற்சபைப் பிரதிநிதிகள் மற்றும் சமூக-அரசியற் வள அறிஞர்கள் என பலரும் இந்த அமர்வில் பங்கெடுக்கெடுத்துள்னர்.
பொதுமக்கள், சமூக-அரசியற் ஆர்வலர்கள் பலரும் பார்வையாளர்களாக பங்கெடுத்துள்ள மே22 வெள்ளிக்கிழமை தொடக்க நிகழவில் மாலை பொது கருத்தாடல் நிகழ்வொன்றும் இடம்பெறுகின்றது.
பொதுன வாக்கெடுப்பு, தமிழகம்- புலம் இடையிலான பன்முக தளத்திலான வளர்த்தெடுத்தல், என பல்வேறு விவகாரங்கள் குறித்தான விவாதங்கள், செயல்வடிவங்கள், தீர்மானங்கள் ஆகியன இம்மூன்று நாள் அமர்வின் உள்ளடக்கமாக இருக்கின்றது.
அருள்