புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2015

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஜெயலிலதாவுக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரன் வாழ்த்து


சவால்களே வாழ்க்கையென்றாகி அவற்றை தகர்த்தெறிந்து இரும்புப் பெண்மணியாக தன்னை நிரூபித்து தமிழகத்தின் முதல்வராக ஐந்தாவது தடவையாகவும் பதவியேற்றுள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா ஜெயராமுக்கு ஈழத்தமிழ் மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றுள்ள ஜெயலலிதாவிற்கு வாழ்த்து தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறதரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“ஈழ மக்களின் தொப்புள் கொடி உறவாகவும், தமிழகத்தின் தலைவிதியாகவும் இருக்கும் தமிழகத்தின் முதலமைச்சர் பதவியை மீண்டும் ஜெயலலிதா அவர்கள் பெற்றிருப்பது பெரும் மகிழ்ச்சிக்குரியது.
தமிழக முதல்வர் ஆசனம் ஈழ மக்களின் வாழ்வில் தாக்கங்களை செலுத்த வல்லது. ஈழ மக்கள் நம்பி இருக்கும் ஆதாரம்தான் அந்த ஆசனம். எனவே தமிழக முதல்வராக பதவியேற்று கடந்த காலத்தில் உலகம் வியக்கும் வண்ணம் ஈழத்தமிழர்களுக்கு நீதிகோரி நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களின் காரணியான முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மீது ஈழ மக்கள் அதிக நம்பிக்கையை கொண்டுள்ளனர்
தக்கதொரு தருணத்தில் மீண்டும் தமிழக முதல்வராக மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் பதவி ஏற்றிருப்பது தமிழ் மக்களின் நெஞ்சங்களில் மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது என  அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad