புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2018

மட்டக்களப்பு மாநகர மேயராக தி. சரவணபவன் உத்தியோக பூர்வமாக இன்று அறிவிக்கப்படவுள்ளார்

மட்டக்களப்பு மாநகர மேயராக தியாகராஜா சரவணபவன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நம்பகத்தன்மையான தகவல்கள் தெரிவிக்கின்றது.

நேற்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒன்றுகூடி இத்தீர்மானத்தை எடுத்தாக அறியக் கூடியதாக உள்ளது. இவர் மட்டக்களபபு மாநகரை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்லக் கூடிய ஆற்றலும், திறமையும் உள்ளவர் என்பதும் பரவலாகப் பேசப்படுகின்றது. இவரைப் பல்வேறு எதிர்பார்ப்புகளுடனேயே மட்டக்களப்பு மக்கள் தெரிவு செய்துள்ளார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக கல்லடி, கல்லடி-வேலூர் 13 ம் வட்டாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிட்ட தியாகராஜா சரவணபவன் அவர்கள் அமோக வெற்றியீட்டியுள்ளார்.

இவர் பலத்த போட்டிக்கு மத்தியிலேயே இவ்வெற்றியைப் பெற்றிருக்கின்றார். இவர் தியாகராஜா ரஞ்சிதம் தம்பதிகளின் புத்திரராவார். இவரின் தந்தை முன்னாள் மாநகசபை மேயர், கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர், கிழக்கு மாகாண கல்விச் செயலாளர், சிறந்த அதிபர் .ஆகிய பதவிகளுக்குச் சொந்தக்காரராவார்.

இவரே அமையவிருக்கும் மாநகரசபைக்கு நியமிக்கப்படும் மேயர் எனப் பரவலாக பேசப்படுகின்றது. இவரின் கல்வித்தரம் M.Sc. Statistics, B.Sc. Maths. ஆசிரியராக 01 வருடமும், பிரதேச செயலகங்களில் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளராக 07 வருடங்களும், ஒக்ஸ்பாம் நிறுவனத்தில் சிரேட்ட நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளராக 13 வருடங்களும், வூஸ்க் நிறுவனத்தில் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளராக 3 வருடங்களும் மக்களுடனேயே கடமையாற்றியுள்ளவர் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விடயமாகும். இவர் பிரதேச செயலக நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளராக சேவையாற்றிய காலப்பகுதியில் கிரான், வாகரை போன்ற பகுதிகளில் பல வீட்டுத்திட்டங்கள் அமைக்க வழி வகுத்துள்ளார்.

ஒக்ஸ்பாம் நிறுவனத்தில் பல்வேறு திட்டங்களை முன்மொழிந்து எமது பகுதிகளுக்கு வெளிநாட்டு உதவிகள் பலவற்றைப் பெற்று எமது பகுதியில் யுத்த காலத்திலும், சுனாமி, வெள்ளப்பெருக்கு போன்ற அனர்த்தங்களின் போதும் எமது மக்களின் வாழ்வாதாரங்கள், வீட்டுத் திட்டங்கள் ஆகியன சிறப்புறச் சேவையாற்றியுள்ளார், சேவையாற்றியுள்ளார். இறுதியாக வூஸ்க் நிறுவனத்தில் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளராக முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் கடமையாற்றியுள்ளார். இவர் தற்போது கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபையின் தலைவராகவும், மட்டக்களப்பு மண்முனை வடக்கு தமிழரவுக் கட்சிக் கிளையின் பொருளாளராகவும், கல்லடி தொடக்கம் மஞ்சந்தொடுவாய் வரைக்குமாக பொது அமைப்புக்களின் ஒன்றியப் பொருளாளராகவும் செயற்படுகின்றார்.

இவர் தூர நோக்கச் சிந்தனை கொண்டவராகவும், எதிர்காலத்திற்கு சவாலாக அமையும் விடயங்களை ஆராய்ந்து அதற்கேற்ப வியூகம் வகுத்துச் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராகவும் காணப்படுகின்றார். இவருக்கு கற்ற சமூகத்தில் நல்ல மதிப்புக் காணப்படுகின்றது.
கல்லடி, கல்லடி-வேலூர் 13 ம் வட்டாரத்தில் இவருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 550 ஆகும். ஐக்கிய தேசியக்கட்சி இவரின் வாக்கு வங்கியை குறைப்பதற்காக 40 இலட்சம் ரூபாயை அபிவிருத்திக்கு என்று ஒதுக்கி செயற்பட்டிருந்ததும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விடயமாகும்.

ad

ad