தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளைக் கைவிட்டு தமது சுயநலத்துக்காக ஒற்றுமை என வேடமிட்டுள்ளோருடன்
நாம் இணையப் போவதில்லை. பதவிகளுக்கான கூட்டையோ தேர்தல்களுக்கான கூட்டையோ நாம் விரும்பவில்லை. ஆனால், தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக கூட்டை, எம் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான கூட்டினை எமது கொள்கையின் அடிப்படையில் உருவாக்குவதற்கு தயாராகவே உள்ளோம். இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
நாம் இணையப் போவதில்லை. பதவிகளுக்கான கூட்டையோ தேர்தல்களுக்கான கூட்டையோ நாம் விரும்பவில்லை. ஆனால், தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக கூட்டை, எம் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான கூட்டினை எமது கொள்கையின் அடிப்படையில் உருவாக்குவதற்கு தயாராகவே உள்ளோம். இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளைக் கைவிட்டு தமது சுயநலத்துக்காக ஒற்றுமை என வேடமிட்டுள்ளோருடன் நாம் இணையப் போவதில்லை. பதவிகளுக்கான கூட்டையோ தேர்தல்களுக்கான கூட்டையோ நாம் விரும்பவில்லை. ஆனால், தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக கூட்டை, எம் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான கூட்டினை எமது கொள்கையின் அடிப்படையில் உருவாக்குவதற்கு தயாராகவே உள்ளோம். இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் தமிழ்த் தேசிய பேரவையாக பரிணமித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து அவரால் அனுப்பிவைக்கப்பட்ட செய்திக்குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் “தாயக மக்களுக்கு எமக்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களையும், இருட்டடிப்புகளையும் தாண்டி எம் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த எம் அன்பிற்குரிய மக்களுக்கு எமது இதயம் கனிந்த நன்றிகள். உங்கள் நம்பிக்கைக்கு அமைய நாம் உங்களுக்காய் தொடர்ந்தும் பணியாற்றுவோம்.
நாம் பெற்றிருக்கும் வெற்றியென்பது தனித்து ஒரு கட்சியின் வெற்றியல்ல. மாறாக, தமிழர்களின் நலனை முதன்மைப்படுத்திய கொள்கைக்காக எமது மக்கள் வழங்கிய அங்கீகாரமும் வெற்றியுமாகும். இது ஒரு ஆரம்பம் மட்டுமே.
நீண்ட கடினமான பணிகளும் சவால்களும் எமக்குக் காத்திருக்கிறது. இந்தத் தேர்தலில் எமக்கு வாக்களிக்காத எமது மக்கள்கூட, இனிவரும் காலத்தில் எமது கொள்கையை பலப்படுத்துவதற்கு அங்கீகாரமும் ஆதரவும் தருவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. இதற்கு இன்று அடைந்துள்ள வெற்றி ஒரு சாட்சி. ஏனையோர் சொல்வதை செய்வதற்கும், தருவதைப் பெறுவதற்கும் நாம் ஒன்றும் அடிமைப்பட்ட இனமல்ல.
எமது பேரம் பேசும் பலத்தை சரணகதி அரசியலூடகவோ, இணக்க அரசியலுடாகவோ அதிகரிக்க முடியாது. ஆகவே, எமது தேசநலனை முதன்மைப்படுத்திய உறுதியான கொள்கையை எடுத்துள்ள நாம், அதனை அமுல்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலை வகுத்து, செயற்றிட்டங்களை முன்னெடுக்க இருக்கிறோம்.இது தொடர்பான சிறப்புக் கலந்துரையாடல்களை எதிர்காலத்தில் உங்களோடு மேற்கொள்ள இருக்கிறோம். தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்திச் செயற்படுவதற்காக, தமிழ்த் தேசியக் கொள்கைப் பற்றுடைய அனைத்து சக்கதிகளையும் கட்சி பேதங்கள் அமைப்புப் பேதங்களைக் கடந்து எம்முடன் இணைந்து செயற்பட முன்வருமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் எமது தேசத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான பயணப் பாதையில் நெருப்பாறுகளையும் நீந்திக் கடக்க வேண்டியுள்ளதால், உங்களது ஆதரவை மென்மேலும் வழங்க வேண்டுமென்று அன்புரிமையோடு கேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளது