புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூன், 2019

பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே - ரவூப் ஹக்­கீம்

தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே ஆவார். இலங்­கை­யில் இனி­மேல் எவ­ரும் பிர­பா­க­ரன் ஆகி­விட முடி­யாது. பிர­பா­க­ர­னு­டன் இஸ்­லா­மி­யப் பயங்­க­ர­வா­தி­களை

ஒப்பி­டு­வது அறி­வீ­னம். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன முஸ்­லிம்­க­ளின் மத்­தி­யி­லி­ருந்து பிரபா­க­ரன் உரு­வாக இட­ம­ளிக்க வேண்­டாம் எனத் தெரி­வித்­தி­ருப்­பது அபத்­த­மான ஒன்று. இவ்­வாறு சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­ஸின் தலைவரும் முன்­னாள் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீம் தெரி­வித்­துள்­ளார்.

இந்­திய ஊட­க­மொன்­றுக்கு வழங்­கி­யுள்ள செவ்­வி­யி­லேயே அவர் மேற்கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.

அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­க­ளின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னுக்­கும் அவ­ரின் இயக்­கத்­தி­ன­ருக்­கும் எனப் பெரும் ஆத­ர­வுத் தள­மி­ருந்­தது. இப்­போ­தும் இருக்­கின்­றது. அதே­வேளை, அவர்களுக்கென்றுகட்டமைப்பு இருந்­தது. அர­சி­யல் கொள்கை இருந்தது. அவர்­க­ளுக்­கென்று ஒரு விடு­த­லைப் போராட்­டம் வடிவமைக்கப்­பட்­டி­ருந்­தது.

நோர்­வே­யின் ஏற்­பாட்­டில் சமா­தா­னப் பேச்­சுக் காலத்­தில் விடுதலைப்புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ரனை கிளி­நொச்­சி­யில் நாம் நேரில் சந்­தித்­தோம். அவர் எனக்­கும் எனது கட்­சி­யி­ன­ருக்­கும் பலத்த வர­வேற்பு வழங்­கி­யி­ருந்­தார். சுமார் ஐந்து மணித்­தி­யா­லங்­கள் எங்களுடன் அவர் மனம் விட்­டுப் பேசி­னார்.



துர­திஷடவ­ச­மாக அந்­தச் சமா­தா­னக் காலம் நீடிக்­க­வில்லை. மீண்­டும் போர் ஆரம்­ப­மா­னது. விடு­த­லைப்­பு­லி­க­ளின் தாக்­கு­தல்­கள் குறு­கிய நோக்­கத்­தில் இருந்­த­தில்லை. உரி­மை­க­ளைக் கேட்டு நிற்­கும் தமிழ் மக்­கள் மீதான இரா­ணு­வத் தாக்­கு­தல்­க­ளுக்­குப் பதி­லடி கொடுக்­கும் வகை­யி­லேயே அவர்­க­ளின் தாக்­கு­தல்­கள் இருந்­தன.

பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே ஆவார். இலங்­கை­யில் இனி­மேல் எவ­ரும் பிர­பா­க­ரன் ஆகி­விட முடி­யாது. இந்­த­நி­லை­யில், பிர­பா­க­ர­னு­டன் இஸ்லா­மி­யப் பயங்­க­ர­வா­தி­களை ஒப்­பி­டு­வது அறி­வீ­னம். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன முஸ்­லிம்­க­ளின் மத்­தி­யி­லி­ருந்து ஒரு பிர­பா­க­ரன் உரு­வாக இட­ம­ளிக்க வேண்­டாம் எனத் தெரி­வித்­தி­ருப்­பது அபத்­த­மான ஒன்று.

இலங்­கை­யில் உயிர்த்த ஞாயி­றன்று தற்­கொ­லைக் குண்­டுத் தாக்குதல்களை நடத்­திய கும்­ப­லுக்­கென்று எது­வுமே கிடை­யாது. இவர்க­ளுக்கு முஸ்­லிம் சமூ­கத்­தி­ட­மி­ருந்து எந்த ஆத­ர­வும் கிடை­யாது. அப்­ப­டி­யான கும்­பல் பிர­பா­க­ரன் என்­கிற தகு­திக்கு வந்து விடு­வார்­கள் என்று அச்­சப்­ப­டு­கின்ற அதீ­த­மான அச்­சப்­போக்கு அபத்­த­மா­னது என்று குறிப்­பிட்­டுள்­ளார்

ad

ad