புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூன், 2019

மஹிந்த அரசை காப்பாற்ற முனைந்த ஐ.நா பிரதிநிதி! - அட்டூழியங்களை மறைக்க முயன்றார்

போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதியாக கடமையாற்றிய சுபினே நந்தி, இறுதிக்கட்ட போரின் போது அரசாங்கம் செய்த அட்டூழியங்கள் வெளியில் வந்துவிடக் கூடாது என்ற வகையிலேயே செயற்பட்டிருந்ததார் என
வடமாகாண முன்னாள் முதலமைச்சரான தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.
போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதியாக கடமையாற்றிய சுபினே நந்தி, இறுதிக்கட்ட போரின் போது அரசாங்கம் செய்த அட்டூழியங்கள் வெளியில் வந்துவிடக் கூடாது என்ற வகையிலேயே செயற்பட்டிருந்ததார் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரான தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

'பாதிக்கப்பட்டோர் - பதின்மம் கழிந்தும்' என்னும் தலைப்பில் ஒரு சுய மதிப்பீட்டு நிகழ்வை யாழ்ப்பாணம் றொட்டறிக் கழகமும் யாழ்ப்பாணம் தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பும் இணைந்து நேற்று நடத்தியிருந்தது.

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சி.வி.விக்னேஸ்வரன் சுபினே நந்தியின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டார்.

ஐ.நா வதிவிடப்பிரதிநிதி சுபினே நந்தி, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக அறிக்கையொன்றையும் தயாரித்திருந்ததாகவும் கடுமையாக சாடியிருக்கின்றார்.

ad

ad