நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு! துன்பங்களை வெல்வதுதான் வாழ்வின் சுவை! ஜெயலலிதா பேச்சு!
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், வீட்டு வசதி மற்றும் நகரப்புற வசதித்துறை அமைச்சருமான ஆர்.வைத்தியலிங்கம் மகன் பிரவுக்கும், மதுரை வடக்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் மகன் கே.பி. சிவசுப்பிரமணியனுக்கும் திருமணம் நடந்தது. இதில் அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஜெயலலிதா,
அறநெறிப்படி வாழ்பவர் வாணுலகத்தில் வாழும் தேவர்களுள் ஒருவராக வைத்து மதிக்கப்படுவார் என்கிறது வள்ளுவம்.